valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆகவே, தவக்கடலான மஹாராஜரே! உம்முடையை பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலமடையாது நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்".

மஹராஜ் இதன் பிறகு ஓர் உருவகக் கதை சொன்னார். அதைக்கேட்ட அனந்தராவ் தாம் கற்ற கல்வி பலனளித்துவிட்டது என்று சமாதானமடைந்தார்.

பரம சாரமுள்ளதும் சுருக்கமானதுமான அக் கதையை இப்பொழுது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள். நகைச்சுவை மிகுந்ததாயினும் போதனை நிறைந்த இக் கதையை யார் அனாதரவு செய்ய முடியும்?

பாபா கேள்விக்கு பதில் கூறினார், "ஒரு சமயம் வியாபாரி ஒருவன் இங்கு வந்தான். அவனெதிரில் இருந்த குதிரை ஒன்பது (சாணி) லத்திகளைப் போட்டது. -

"வியாபாரி செயல் முனைப்பு உடையவனானதால் சட்டென்று தன்னுடைய அங்கவஸ்திரத்தை விரித்தான். ஒன்பது லத்திகளையும் ஜாக்கிரதையாக சேகரித்துக் கட்டிக்கொண்டான். ஒருமுனைப்பட்ட மனம் உடையவன் ஆனான்."

சமர்த்த சாயி தெரிவிக்க விரும்பியது என்ன? அதனுடைய உட்பொருள் என்ன? வியாபாரி (சாணி) லத்திகளை எதற்காகச் சேகரித்தான்? விஷயமென்னவென்றே புரியவில்லையே!

அனந்தராவ் இதைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, மசூதியில் இருந்து திரும்பி வந்து, நடந்த சம்பாஷணை முழுவதையும் தாதா  கேள்கரிடம் விவரித்தார்.

"யார் இந்த வியாபாரி? குதிரைச் சாணியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஏன் குறிப்பாக ஒன்பது லத்திகள்? இவையெல்லாம் பற்றி எனக்கு விளக்குங்கள்.-

"தாதா, இதென்ன புதிர்? என்னுடைய சிறுமதிக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள். பாபாவின் இதயத்தில் என்ன நினைத்தார் என்பது எனக்கு விளங்க வேண்டும்."

தாதா கூறினார், "பாபாவின் திருவாய்மொழியை முழுக்க என்னாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும், அவர் தரும் உள்ளுணர்வால் நான் என்ன புரிந்துகொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்.-

"குதிரை இறைவனின் அருள்; ஒன்பது (சாணி) லத்திகள் ஒன்பது விதமான பக்தியின் வெளிப்பாடுகள். பக்தியின்றிப் பரமேச்வரனை அடைய முடியாது. ஞானத்தால் மட்டும் அவனை அடையமுடியாது. -

"பக்தியின் வெளிப்பாடுகளை பற்றி இவ்விதம் அறிவீராக.
முதலாவதாக, சிரவணம் (இறைவனின் பெருமையைக் கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம் (இறைவனின் லீலைகளை பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மாரணம் (இறைவனை நினைத்தல்),
நான்காவதாக, பாதசேவனம் (பாதங்களை கழுவுதல் - பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம் (மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல் - நமஸ்காரம் செய்தல் - வணங்குதல்), 

 

No comments:

Post a Comment