valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

முதலில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதை பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பித்தில் இருந்து முடிவு வரை அதன்படி நடக்க வேண்டும். திரும்ப திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.

வாசிப்பதே முடிவான காரியம் அன்று. அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.

அனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். ப்ரம்ம ஞானம் அடைந்த குருவின் கிருபை இல்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

புருஷார்த்தங்கள் (அறம், பொருள், இன்பம், வீடு), பக்தியின் உண்மை நிலை, இவற்றை விளக்கும் ஒரு சிறுகதையை இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். கேட்பவர்கள் தங்களுடைய நன்மை கருதி கவனமகாக கேட்கட்டும்.

புண்ணியப்பட்டணத்தில் (புனே) வசித்து வந்த அனந்தராவ் பாடன்கர் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் சாயிதரிசனம் செய்ய ஆவல் கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவர் வேதாந்தம் பயின்றவர்; உபநிஷதங்களையும் பாஷ்யங்களையும் (விரிவுரை) மூல மொழியான சமஸ்கிருதத்திலேயே படித்தவர். அவ்வளவு படிப்பும் அவருக்கு மனவமைதியை அளிக்கவில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

சமர்த்த சாயியை தரிசனம் செய்தவுடனே அவர் சாந்தியடைந்தார். பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சடங்குகளுடன் கூடிய பூசையும் செய்தார்.

கைகளைக் கூப்பி அஞ்சலி செய்துகொண்டு பாபாவின் எதிரில் உட்கார்ந்தார். பிரேமையுடன் கருணை வேண்டும் குரலில் கேட்டார்.

"பலவிதமான நூல்களை படித்துவிட்டேன்; வேதங்களின் சிகரமான உபநிஷதங்களையும் அத்யயனம் (மனப்பாடமாக ஓதுதல்) செய்துவிட்டேன். சத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக் கேட்டுவிட்டேன். ஆயினும் ஏன் என் மனம் ஏக்கம் பிடித்தும் சோர்வடைந்தும் இருக்கிறது?-

"நான் வாசித்ததெல்லாம் வீண் என்று நினைக்காத தோன்றுகிறது. ஓரெழுத்தும் பயிலாத பாவ பக்தி உள்ளவர் என்னை விடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன்.-

"நான் பல நூல்களைக் கற்றதும் சாஸ்திரங்களை பரிசீலனை செய்ததும் வீண். மனதிற்கு சாந்தியளிக்காத அனைத்துப் புத்தக ஞானமும் வீணே!-

"ஓ, சாஸ்திரங்களை குடைந்து ஆராய்வது எவ்வளவு சாரமில்லாத விஷயம்! மஹாவாக்கியங்களை ஜபம் செய்தும் மனவமைதி பிறக்கவில்லையெனில் ஜபம் செய்வதால் என்ன பிரயோஜனம்? ஓ, மனவமைதியே கிடைக்கவில்லை எனில் ப்ரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?-

"சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றிவிடுகிறதென்றும், சாந்தியை அளிக்கிறதென்றும், ஈதனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறதென்றும், சாயி மிக சுலபமாக பக்தருக்கு நல்வழி காட்டுகிறாரென்றும் செவி வழிச் செய்தியாக அறிந்தேன்.- 


No comments:

Post a Comment