valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஈசாவாஸ்ய உபநிஷதம் என்னும் தாமரையின் மீது, வாக்தேவதையாகிய சரஸ்வதி என்னும் வந்து ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றிவரும். அது தாமரையின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிப்பதற்கு, செவிமடுப்பவர்கள் தங்களுடைய சாமர்த்தியத்தை எல்லாம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

ஆகவே, அது அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான சாயியே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா.

பந்த் ஹேமாட் சாயியை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் சாயிக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரசங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'எனக்கு அனுக்கிரஹம்' என்னும் பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

                            ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                         சுபம் உண்டாகட்டும்.  


No comments:

Post a Comment