ஷீர்டி சாயி சத்சரிதம்
நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனதை வீழ்ச்சியடைய செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது!
நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு பிடியிலும் நம்முடைய தோஷங்களை தெரிவித்து எதிர்காலத்தில் விளையக்கூடிய அனேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்;
ஞானிகளாலும் சாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
இந்த நிந்தையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தை செய்தவர் காளைக்கு கடன்களை கழிப்பதற்காக ஓடைக்கு சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்கு சென்றுவிட்டது.
பாபா பரிபூரணமான அந்தர் ஞானியானதால் தம் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்வத்தைப் பற்றிக் கேளுங்கள்.
லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.
தம்முடைய காரியாக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையிலிருந்து வீடு நோக்கி கிளம்பினார்.
இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.
அவ்விடத்திலேயே ஒரு காம்ப்பவுண்டு வேலிக்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தை சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக் காட்டினார்.
"அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரசித்தும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தனித்துக் கொண்டிருக்கிறது.-
"பல சுகிர்தங்களைச் (நற்செயல்களை) செய்ததால் தனக்கு கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே வழிகோலும் மனிதனுக்கு இந்த ஷீர்டி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்?"
பாபா இந்த தொனியிலேயே பிரசங்கம் செய்து கொண்டுபோனார். நீந்த செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தன!
இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரசங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் சாரத்தை மனதில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது?
நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனதை வீழ்ச்சியடைய செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது!
நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு பிடியிலும் நம்முடைய தோஷங்களை தெரிவித்து எதிர்காலத்தில் விளையக்கூடிய அனேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்;
ஞானிகளாலும் சாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
இந்த நிந்தையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தை செய்தவர் காளைக்கு கடன்களை கழிப்பதற்காக ஓடைக்கு சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்கு சென்றுவிட்டது.
பாபா பரிபூரணமான அந்தர் ஞானியானதால் தம் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்வத்தைப் பற்றிக் கேளுங்கள்.
லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.
தம்முடைய காரியாக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையிலிருந்து வீடு நோக்கி கிளம்பினார்.
இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.
அவ்விடத்திலேயே ஒரு காம்ப்பவுண்டு வேலிக்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தை சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக் காட்டினார்.
"அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரசித்தும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தனித்துக் கொண்டிருக்கிறது.-
"பல சுகிர்தங்களைச் (நற்செயல்களை) செய்ததால் தனக்கு கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே வழிகோலும் மனிதனுக்கு இந்த ஷீர்டி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்?"
பாபா இந்த தொனியிலேயே பிரசங்கம் செய்து கொண்டுபோனார். நீந்த செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தன!
இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரசங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் சாரத்தை மனதில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது?
No comments:
Post a Comment