valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆதிதைவிகம், ஆத்யாமிகம், ஆதிபௌதிகம், ஆகிய மூவகைத் துன்பம் என்னும் ஊழியத்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக் கொண்டிருக்கும் சம்சாரக் கடலில் யாரால் சந்தோஷமாக வாழ முடியும்?

இத் துன்பங்களில் இருந்து விடுபட, சாயியுனடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான சரித்திரத்தை பய பக்தியுடன் கேளுங்கள்; பாராயணம் செய்யுங்கள்; மனத்திரையில் ஓட விடுங்கள்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேந்து கொண்டு இந்த 'ஸ்ரீ சாயிநாத சரித்திரம்' செவிமடுக்கப் பட்டால் அவர்களுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள் விசித்திரமானவை!

பாக்கியம் செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள் சாந்தமயமாகிவிடுவீர்கள்.

இக்காதையின் அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நர்செயலோ , தீச்செயலோ) கரைந்து விடும். கேட்கக் கேட்க, சாயியின் சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.

சாயியின் காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாசம் ஏதுமில்லாமல் பரம உல்லாசத்தையும் அடைகிறார்கள்.

சாயி சரித்திரத்தை கேட்பது மனதைத் தூய்மை அடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழலில் இருந்து விடுபட செய்கிறது. செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி செய்து, உயர்ந்த பதவியான பிரம்ம பதத்தை அடைய வழிகோலுகிறது.

இவ்வாறாக, சாயினாதருக்கு சேவை செய்ய வேண்டுமென்கிற ஆசை, சேவகர்களை நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கி விடுகிறது. ஸ்ரீ சாயிராமன் அவர்களுக்கு சதா சர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.

செவிமடுப்பவர்களே! இக்காவியத்தின் ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால் கேளுங்கள்; படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததை சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம் செய்யுங்கள்.

தைத்ரிய உபநிஷதத்தின் சித்தாந்தமான, "ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்" என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்ப திரும்ப உபதேசம் செய்தது போல் தோன்றியது.

"சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவராக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; கவலையே வேண்டா". இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.

இந்த அத்தியாயத்தின் லட்சியம் பிரம்ம தத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. சாயியிடம் சரணமடைபவர்களுக்கு அதுவே சம்சாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.    


No comments:

Post a Comment