ஷிர்டி சாயி சத்சரிதம்
"பாபாவுக்கு அவசரமாக ஐந்து ரூபாய் கடனாக தேவைப் பட்டது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன் திருப்பிக் கொடுக்கப்படும்"
பையன் நந்து மார்வாடியின் வீட்டிற்கு சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பி வந்து பாபாவிடம் செய்தி சொன்னான்.
பாபா கூறினார், "மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம். அனேகமாக அவர் வீட்டில் இருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல். சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வா. போய் வா!"
இந்த நடையும் வியர்த்தமாகப் போயிற்று. பாலா வீட்டில் இல்லை! நடந்ததை எல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.
பாபா அவசரமாக இன்னும் ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும் இங்கும் ஓடுவதில் களைத்துப் போனானே தவிர, ஒரு பைசாவும் கொண்டு வரவில்லை.
நந்துவோ, பாலவோ, மற்றவர்களோ வீட்டில் இல்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.
நடமாடும், பேசும், தெய்வமாகிய சாயினாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைபட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காக செய்யப்பட்ட லீலையே.
வீட்டிற்கு விஜயம் செய்யும் விருந்தினருக்காக செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டில் உள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தம் அடைகின்றனர் அல்லரோ!
அதுபோலவே, தம் அடியவர்களுக்கெல்லாம் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்!
அவருடைய ஜோபியில் 250 ரூபாய்க்கு மேல் ஒரு நோட்டுக் கட்டு இருந்தது; அது பாபாவுக்கு தெரியும்.
பிரம்மத்தை தேடிக்கொண்டு வந்தவருக்கு அது தெரியாதா என்ன? நோட்டுக் கட்டு ஜோபியில் இருந்த போதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை செய்து விட்டன.
முழு முதற் பொருளைக் கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக் கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய் பாபாவுக்கு (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாக கொடுப்பதற்கு அவருக்கு மனமில்லை!
சாயி மகாராஜ் சத்தியசந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில் திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையே! ஆயினும், கடன் கொடுக்கலாம் என்று அவர் மனதில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை ஆட்கொண்டது.
"பாபாவுக்கு அவசரமாக ஐந்து ரூபாய் கடனாக தேவைப் பட்டது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன் திருப்பிக் கொடுக்கப்படும்"
பையன் நந்து மார்வாடியின் வீட்டிற்கு சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பி வந்து பாபாவிடம் செய்தி சொன்னான்.
பாபா கூறினார், "மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம். அனேகமாக அவர் வீட்டில் இருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல். சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வா. போய் வா!"
இந்த நடையும் வியர்த்தமாகப் போயிற்று. பாலா வீட்டில் இல்லை! நடந்ததை எல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.
பாபா அவசரமாக இன்னும் ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும் இங்கும் ஓடுவதில் களைத்துப் போனானே தவிர, ஒரு பைசாவும் கொண்டு வரவில்லை.
நந்துவோ, பாலவோ, மற்றவர்களோ வீட்டில் இல்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.
நடமாடும், பேசும், தெய்வமாகிய சாயினாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைபட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காக செய்யப்பட்ட லீலையே.
வீட்டிற்கு விஜயம் செய்யும் விருந்தினருக்காக செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டில் உள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தம் அடைகின்றனர் அல்லரோ!
அதுபோலவே, தம் அடியவர்களுக்கெல்லாம் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்!
அவருடைய ஜோபியில் 250 ரூபாய்க்கு மேல் ஒரு நோட்டுக் கட்டு இருந்தது; அது பாபாவுக்கு தெரியும்.
பிரம்மத்தை தேடிக்கொண்டு வந்தவருக்கு அது தெரியாதா என்ன? நோட்டுக் கட்டு ஜோபியில் இருந்த போதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை செய்து விட்டன.
முழு முதற் பொருளைக் கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக் கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய் பாபாவுக்கு (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாக கொடுப்பதற்கு அவருக்கு மனமில்லை!
சாயி மகாராஜ் சத்தியசந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில் திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையே! ஆயினும், கடன் கொடுக்கலாம் என்று அவர் மனதில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை ஆட்கொண்டது.
No comments:
Post a Comment