valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

எவ்வாறு சாயியினுடைய அருளால் பீமாஜி சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார் என்பதையும், எவ்வாறு அவர் நன்றியுணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் சாயி பாதங்களில் சரணடைந்தார் என்பதையும் சொன்னேன். 

சொல்லப்போகும் நிகழ்ச்சியும் அதுபோன்றே விநோதமானது. யாரும் ஏற்கெனவே கண்டிராத அற்புதம். கதை கேட்பவர்கள் மேலும் கேட்பதற்கு எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், அதை இப்பொழுது சொல்கிறேன். 

கேட்பவர்களுக்கு ஆர்வமில்லையெனில், கதை சொல்பவர் எப்படி உணர்வூட்டப்படுவார்? கதை எவ்வாறு சிறக்கும்? எவ்வாறு ரசபூர்ணமாக (ஆனந்தம் நிரம்பியதாக) இருக்கும்? 

இந்நிலையில் பிரவசனம் செய்வபர் என்ன செய்யமுடியும்? அவர் முழுக்க முழுக்கக் கேட்பவர்களின் ஆதீனத்தில் அன்றோ இருக்கிறார். கதை கேட்பவர்களே அவருக்கு முக்கிய ஆதாரம்; அவர்களுடைய உற்சாகத்தினால்தான் கதை இனிமை நிம்பியதாகிறது; 

ஒரு ஞானியின் சரித்திரமாக இருப்பதால், சுபாவத்திலேயே காதை உள்ளும் புறமும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், அவருடைய வாழ்க்கை நெறி, ஆகாரப் பழக்கம், நடத்தை, போக்குவரத்து அனைத்துமே கவர்ச்சியானவை; அவருடைய சஹஜமான சொல்லே இனிமையானது. 

இது வெறும் வாழ்கைச் சரித்திரம் அன்று; ஆத்மானந்ததின் ஜீவனாகும். இதை தயாசாகரமான சாயி மகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார். 

பிரவிருத்தி மார்காதைப் பற்றிப் (உலகியல் வாழ்முறைப் பற்றிப்) பேசியே அவர்களுக்கு நிவிர்த்தி மார்க்கத்தை (ஆன்மீக் வாழ்முறையை) க் காண்பித்தார். சத்புருஷர்களின் கதைகள் இவ்விதமாக, இவ்வுலக வாழ்வையும் பரவுலக வாழ்வைப் பற்றி பேசும். 

இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். 

அனந்தமான புண்ணியங்களின் பலத்தால் நரஜன்மம் எதிர்பாராமலேயே ஏற்படுகிறது. மனிதன் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்தால் அது மிகப் பெரும் பாக்கியம். 

இந்த நல்வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளாதவன் தன்னைப் பூமிக்கு அர்த்தமற்ற பாரமாகிக் கொள்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சி, ஒரு மிருகத்தின் மகிழ்ச்சியைவிட எப்படி அதிகமாக இருக்க முடியும்?

அம்மாதிரியான மனிதன் கொம்புகளும் வாழும் இல்லாத மிருகமே அல்லனோ! அவர்னுக்கு உண்பதும் உறங்குவதும் பயப்படுவதும் சிற்றின்பச் சேர்க்கையும் அல்லால் வேறெதுவும் தெரியாது. 

ஓ! நரஜன்மத்தின் மகிமைதான் என்னே! பக்தியும் இறை வழிபாடும் முக்தியடைவதும் இந்த நரஜன்மத்தின் மூலமாகத்தான் லாபமாகும்; தன்னையறிதலும் இதன் மூலமாகவே. 



No comments:

Post a Comment