valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 December 2014

ஷிர்டி சாயி   சத்சரிதம்

சாயிநாதா, ஞானிகளில் உத்தமரே, ஜெய ஜெய! தயாளரே, குண கம்பீரரே, ஜெய ஜெய நிர்விகாரேரே, அப்பாலுக்கும் அப்பாற்படவரே, ஜய ஜய! எல்லையற்றவரே, மாசிலாமணியே ஜய ஜய!

நிஜமான பக்தர்களின் மீதுள்ள தயையினால், அவர்களால் கண்டறிய முடியாதவற்றை மனதிற்கொண்டு அவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிப்பதற்காகப் பல உருவங்களில் தோன்றுகிறீர். 

தீனர்களை உத்தாரணம் செய்வதற்காகவும்   பக்தர்களுக்குள்ளே இருக்கும் அரக்கத்தனம், கெட்ட புத்தி, துர்நடத்தையைத் தூண்டும் பூர்வஜன்ம வாசனைகள் இவற்றை வதம் செய்வதற்காகவும் தோன்றிய லீலாவதரமே நீர். 

எவரெல்லாம் தூய மனதுடன் சாயி தரிசனத்திற்கு வந்தனரோ அவரெல்லாம் ஆத்மானந்த ரசத்தைப் பருகினர்; உள்ளே ஆனந்தம் நிரம்பி  வழிந்தது; அன்பினால் கண்ட சுகத்தில் ஊஞ்சலாடினர்.

ஹீனனும் தீனனுமாகிய நான், இக்குணங்கள் நிரம்பிய சமர்த்த சாயியினுடைய பொற்பாதங்களில் சரணாகதியாக சாஷ்டாங்கமாக விழுந்து மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம் செய்கிறேன். 

மலேரியா ஜூரத்தால் பீடிக்கப்பட்ட பக்தர், கறுப்பு நாய் தயிர்சோறு தின்றதால் குணமடைந்த (முன்பு சொன்ன) காதையிலிருந்து நான் இப்பொழுது தொடர்கிறேன். 

பயங்கரமான காலரா நோய், அவர் ஆட்காட்டி விரலை உயர்த்தியதாலும் தரண் (பாதாம், பிஸ்த, அக்ரூட் பருப்புகளைப் பாலில் வேக வைத்த பானம்) குடிகள் வைத்ததாலும் வருத்த வேர்கடலையை தின்பதற்கு கொடுத்ததாலும் மறைந்துவிட்டது எவ்வாறு என்பதுபற்றியும், - 

அதுபோலவே, ஒருவருடைய சூலைநோய், மற்றொருவர் உடைய காதுவலி, இன்னொருவருடைய க்ஷய ரோகம் ஆகியவை தரிசனமாத் திரத்திலேயே  எவ்வாறு அளிக்கப்பட்டன என்பது பற்றியும், -


No comments:

Post a Comment