ஷிர்டி சாயி சத்சரிதம்
பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார். ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய் விட்டார். பாபா திரும்பிச் சென்று விட்டார்.
மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக் கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பி வைத்தார்.
உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார். (கொடுத்தார்).
இதற்குப் பிறகு இவ் விருவர்களுக்கிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கனேவே நடந்ததை எல்லாம் இருவருமே முற்றிலும் மறந்து விட்டதைப் போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப் பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார்.
சில நாள்களுக்குப் பிறகு, ஹாஜி ஷிர்டியை விட்டுச் சென்று விட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பி வந்தார். பாபாவின் மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப் போது பணம் கொடுப்பதை தொடர்ந்தார்.
இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சி செலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப் பட்டேன்.
மிகப் பயங்கரமான நேரம் அது. வானம் முழுவதும் மேக மூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்ரோஷமான சூறைக் காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது.
அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்ட போது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது.
இது போதா தென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன. மின்னல்கள் பள பளத்தன. சூறைக் காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது.
மேகங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. ஷிர்டி கிராம மக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடு மாடுகள் பரிதாபமாக கதறின.
மசூதியின் சார்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகளும் அங்கு வந்து குழுமின. masoothiyil இடமில்லை.
தண்ணீர், தண்ணீர், தண்ணீர் எங்கே பார்த்தாலும் தண்ணீர். மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அறுத்துக் கட்டுக் கட்டிக் கொட்டகையில் வைக்கப் பட்டிருந்த தானியங்கள் எல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனந்களுக்கிடையில் பீதியில் அமளியும் நிலவியது.
கிராம மக்கள் பயத்தால் நடுநடுங்கி சபா மண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக் கொள்வதற்காகவே வந்திருந்தனர்.
No comments:
Post a Comment