valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 February 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசு'வாகவே இருக்கிறாய். அல்லா அனுக்ரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும்? 

"அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏற முடியுமா? இங்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ள முடியாதவை. அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது. 

"எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் கேள். "

ஹாஜி சொன்னார், "எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாக பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களி னுக்கருகில் அமர என்னை அனுமதியுங்கள்".

இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், "மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்."

இந்தச் செய்தியை சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார். "என்ன கேள்வி கேட்கிறீர்! பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களை பற்றிய கதை என்ன?

பாபா இதைக் கேட்டுவ விட்டு மேலும் சொன்னார், "இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப் போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.-

"மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா? அல்லது அவர் கொட்டைகளின்மீது மனதை வைத்திருக்கிறாரா? போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரை கேட்டுகொண்டு வா".

மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்கு தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாக பதிலுரைத்தார். "எனக்கு அதில் எதுவுமே வேண்டா.-

"ஏதாவது எனக்கு கொடுக்க வேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவிலிருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மகா பாக்கியசாலி யாகக் கருதுவேன்."

மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்கு தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார். 

கொலம்பாவையும் குடிநீர்பானையையும் கதவு வழியாக வெளியே எடுத்தெரிந்தார்.  ஆக்ரோஷமாக தம்முடைய கைகளை கடித்துக் கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார். 

கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக் கொண்டு நின்று, அவர் சத்தம் போட்டார், "நீர் உம்மை என்னவென்று நினைத்துக் கொண்டு என்முன்னே கர்வம் காட்டுகிறீர்.?-

"உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீரா இப்படித்தான் உம்முடைய குர் ஆனை படித்தீரா? மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனித யாத்திரை சென்றது உம்மை கர்வியாகவும் கோபக் காரராகவும் செய்து விட்டதே; என்னை நீர் இன்னும் அறிந்து கொள்ளவில்லை."


No comments:

Post a Comment