valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 March 2013

ஞானம், அஞ்ஞானம் இரண்டுமே மனத்தின் விகாரங்கள்; மயக்கத்திற்கும் தவறுகளுக்கும் இடமளிக்கக் கூடியவை. ஒரு முள்ளை  மற்றொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதுபோல ஒன்றை மற்றோன்றால்  நீக்க வேண்டும்.

அஞ்ஞானத்தை ஞானத்தால் விரட்ட வேண்டும். இருப்பினும் மனிதப் பிறவியின் மிகச் சிறந்த இலக்கு, அஞ்ஞானம் - ஞானம் இரண்டிற்கும் அப்பால் சென்று, பரிசுத்தமான ஆத்மாவிலேயே  கரைந்து போவதுதான்

புலனின்ப நாட்டம் என்னும் எண்ணெய்  எரித்து முடிக்கப் படும் வரை, அஞ்ஞான  இருள் சாம்பலாக்கப் படும்வரை, 'நான்', 'என்னுடையது' என்னும் திரி பொசுங்கிப் போகும்வரை, ஞானம் பிரபையுடன் (சுடரைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டம்) ஒளிவிடாது.

தவிர்க்க முடிந்ததோ, தவிர்க்க முடியாததோ, நரதேஹத்தால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் புத்தியால் நிச்சயிக்கப் பட்டு நிறைவேற்றப்படுகின்றன என அறியவும்

செய்வதற்கு வேலை என்று ஒன்றும் இல்லாதவன், ஐஸ்வர்யத்தையும் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு வாழலாம் அல்லது ராம நாமத்தை ஜபம் செய்யலாம். ராமநாமம் ஆசைகளில் இருந்தும் தொல்லைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்

உடலின் உறுப்புகள், மனம் புத்தி இவை ஆத்மாவினுடைய உபாதிகள் இவ்வுபாதிகளால், ஆரம்பம் இல்லாததும் இன்பம் தேடாததுமான ஆத்மா, கர்மவினைகளால் ஏற்பட்ட இன்னல்களை அடைகிறது

தன்னுடைய சுய குணத்தால் இன்பம் தேடாத ஆன்மா, இன்னலடைவது மேற்சொன்ன உபாதிகலாலேயே. அன்வயம் (என்பது 'புகை இருக்குமிடத்தில் நெருப்பு இருக்கும்' என்று சொல்வது போன்று உடன்பாட்டு முறையான விதி ) - வ்யதிரேக்கம் என்னும் விதிகளை காட்டி நியாயசாஸ்திரம் இதற்கு நிரூபணம் அளிக்கிறது

செயல்களையும் மனத்தின்  தாவல்களையும் புத்திக்கு விட்டுவிட வேண்டும் என்பதை அடிப்படை தத்துவமாக அறிந்து கொள். உன்னைப் பொறுத்துவரை செயல் புரியாதவனாக இரு. (இறைவனின் கையில் நான் ஒரு கருவியே என்னும் பாவனை)

சுயதர்மத்தை அனுஷ்டானம் செய்; ஆத்மாவுடன் சம்பத்தப் படாதவற்றை விலக்கி , எந்நேரமும் ஆத்மாவிலேயே எண்ணத்தை செலுத்து. தன்னிலேயே மூழ்கிப் போகும் இந்தத் திருப்தியும் சாந்தியுமே நரஜன்மத்தின் முடிவான இலக்காகும்.

தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆகிய நான்கு மனித வாழ்வின் லக்ஷணங்களை அடைவதற்கு, உடலைவிட்டால் வேறு வழியே இல்லை. இந்த நான்கு புருஷார்த்தங்களை எப்படி அடைவது என்பதை அப்பியாசம் செய்யும் மானுடன் ஸ்ரீவைகுண்ட பதவியை அடைந்துவிடுவான்.

ஆகவே இவ்வுடல் கீழே வீழ்வதற்கு முன்பே ஆத்மஞானம் பெறுவதற்கு முயற்சி செய்வீராக. நரஜன்மத்தின் ஒரு நொடியைக் கூட வீண் செய்துவிடாதீர்.




No comments:

Post a Comment