ஷிர்டி சாயி சத் சரிதம்
சூரியனும் சந்திரனும் கணக்கற்ற நக்ஷத்திரங்களும் அடங்கிய பிரம்மாண்டமான சிருஷ்டியில், எதற்கும் இவ் வற்புதமான நிர்மாணத்தைப் பற்றிய சிந்தனையோ, வியப்போ, படைப்பாளியைப் பற்றிய பிரமிப்போ சிறிதளவும் ஏற்படவில்லை!
இப் பிரபஞ்சத்தின் தலைவனாக, சிருஷ்டி என்னும் இந்த லீலையை நான் புரிந்த காரணம் ஓர் உயிருக்கும் தெரியவில்லையே!
ஆகவே, என்னுடைய சிருஷ்டியின் வைபவங்களைப் புரிந்து கொள்ளவும் என்னுடைய ஒப்பில்லா மகிமை படைத்த செயலைப் பாராட்டுவதற்கும் தேவையான திறமையுள்ள, தர்ப்பையின் நுனி போன்ற கூறிய மதி படைத்த, ஒரு ஜீவனை நான் சிருஷ்டி செய்யாதவரை, நான் ஏற்கெனவே செய்த செயல்களனைத்தும் பயனற்று போகும்.
ஆகவே, இறைவன் மனிதனைப் படைத்தான். ஜெகதீசன் நினைத்தான், "இம்மனிதன், சாரம் எது? சாரமில்லாதது எது? என்று தன்னுடைய புத்தியை உபயோகித்துத் தெரிந்துகொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போவான்.
"மனிதனால்தான் ஞானத்தை சம்பாதித்துக் கொண்டு என்னைப் பற்றிய சிந்தனையும் தியானமும் செய்து மரியாதை கலந்த பயத்தாலும் வியப்பாலும் நிரம்பிப் போக முடியும். என்னுடைய லீலை அப்போதுதான் பூரணமாகும்.
"பார்வையாளர்களுடைய மகிழ்ச்சியே என்னுடைய லீலையின் நிறைவேற்றும் இவ்வுலகத்தை நான் நிர்வகிக்கும் திறமையைப் பார்த்து மனிதன் திருப்தி அடைவான்.
பலனை விரும்பிச் செய்யும் செயல்களும் பணம் சம்பாதிப்பதும் மனிதவுடலைப் பேணிக் காப்பதன் நோக்கமல்ல. உயிருள்ளவரை விடாமுயற்சியால் தத்துவ ஞானத்தை சம்பாதிப்பதே பிறவியின் பயன்.
அபேதத்தை உணர்வதே சிறந்த ஞானம். உபநிஷதங்கள் இதையே பிரம்ம ஞானம் என்று அழைக்கின்றன இறைவனை வழிபடுவதும் சேவை செய்வதும் இதுவே 'பகவான் பக்தர்களைச் சார்ந்தவன்" என்ற வசனத்திற்குப் பொருளும் இதுவே என்று கொள்ளலாம்.
"பிரம்மமும் குருவும் தானும் ஒன்றே" என்ற அபேத ஞானத்தைப் பெற்றவனுக்கு அதே மார்க்கத்தில் பக்தி செலுத்துபவனுக்கு மாயையை வெல்வது சுலபம்
இவ்வாறு சிரத்தையுடன் கூடிய ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் பெற்ற யோக்கிய புருஷர்கள் மாத்திரமே தன்னை அறியும் சுகத்தைப் பெறத் தகுதியுடையவர்கள். அம்மாதிரியான பக்தர்கள் பாக்கிய சாலிகள் என அறியவும்.
"தான் யார்" என்று அறியாமல் தன்னை முழுமை பெற்றவன் என்று நிர்ணயித்துக் கொள்வதால் ஓர் அவலக்ஷனமான பிரதிபந்தம் (மாற்றுத்தளை ) உருவாகிறது.
சூரியனும் சந்திரனும் கணக்கற்ற நக்ஷத்திரங்களும் அடங்கிய பிரம்மாண்டமான சிருஷ்டியில், எதற்கும் இவ் வற்புதமான நிர்மாணத்தைப் பற்றிய சிந்தனையோ, வியப்போ, படைப்பாளியைப் பற்றிய பிரமிப்போ சிறிதளவும் ஏற்படவில்லை!
இப் பிரபஞ்சத்தின் தலைவனாக, சிருஷ்டி என்னும் இந்த லீலையை நான் புரிந்த காரணம் ஓர் உயிருக்கும் தெரியவில்லையே!
ஆகவே, என்னுடைய சிருஷ்டியின் வைபவங்களைப் புரிந்து கொள்ளவும் என்னுடைய ஒப்பில்லா மகிமை படைத்த செயலைப் பாராட்டுவதற்கும் தேவையான திறமையுள்ள, தர்ப்பையின் நுனி போன்ற கூறிய மதி படைத்த, ஒரு ஜீவனை நான் சிருஷ்டி செய்யாதவரை, நான் ஏற்கெனவே செய்த செயல்களனைத்தும் பயனற்று போகும்.
ஆகவே, இறைவன் மனிதனைப் படைத்தான். ஜெகதீசன் நினைத்தான், "இம்மனிதன், சாரம் எது? சாரமில்லாதது எது? என்று தன்னுடைய புத்தியை உபயோகித்துத் தெரிந்துகொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போவான்.
"மனிதனால்தான் ஞானத்தை சம்பாதித்துக் கொண்டு என்னைப் பற்றிய சிந்தனையும் தியானமும் செய்து மரியாதை கலந்த பயத்தாலும் வியப்பாலும் நிரம்பிப் போக முடியும். என்னுடைய லீலை அப்போதுதான் பூரணமாகும்.
"பார்வையாளர்களுடைய மகிழ்ச்சியே என்னுடைய லீலையின் நிறைவேற்றும் இவ்வுலகத்தை நான் நிர்வகிக்கும் திறமையைப் பார்த்து மனிதன் திருப்தி அடைவான்.
பலனை விரும்பிச் செய்யும் செயல்களும் பணம் சம்பாதிப்பதும் மனிதவுடலைப் பேணிக் காப்பதன் நோக்கமல்ல. உயிருள்ளவரை விடாமுயற்சியால் தத்துவ ஞானத்தை சம்பாதிப்பதே பிறவியின் பயன்.
அபேதத்தை உணர்வதே சிறந்த ஞானம். உபநிஷதங்கள் இதையே பிரம்ம ஞானம் என்று அழைக்கின்றன இறைவனை வழிபடுவதும் சேவை செய்வதும் இதுவே 'பகவான் பக்தர்களைச் சார்ந்தவன்" என்ற வசனத்திற்குப் பொருளும் இதுவே என்று கொள்ளலாம்.
"பிரம்மமும் குருவும் தானும் ஒன்றே" என்ற அபேத ஞானத்தைப் பெற்றவனுக்கு அதே மார்க்கத்தில் பக்தி செலுத்துபவனுக்கு மாயையை வெல்வது சுலபம்
இவ்வாறு சிரத்தையுடன் கூடிய ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் பெற்ற யோக்கிய புருஷர்கள் மாத்திரமே தன்னை அறியும் சுகத்தைப் பெறத் தகுதியுடையவர்கள். அம்மாதிரியான பக்தர்கள் பாக்கிய சாலிகள் என அறியவும்.
"தான் யார்" என்று அறியாமல் தன்னை முழுமை பெற்றவன் என்று நிர்ணயித்துக் கொள்வதால் ஓர் அவலக்ஷனமான பிரதிபந்தம் (மாற்றுத்தளை ) உருவாகிறது.
No comments:
Post a Comment