ஷிரிடி சாயி சத் சரிதம்
உடலைக் கேவலம் உன் வேலைக்காரனாக நடத்து. அளவுக்கதிகமாக அதைப் பாராட்டாதே . அதற்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்து உன்னை நரகத்திற்கு இழுத்துக் கொண்டு போய் விடாதே.
அதற்கு உணவும் உடையும் தேவையான அளவு கொடுத்து நிர்வாகம் செய். அவ்வப் போது போஷித்துப் பாலனம் செய். அவ்விதம் செய்தால்தான் உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜனனமரணச் சூழலிருந்து விடுபடுவதற்கும் உபயோகிக்க முடியும்.
ஜனன மரண அனர்த்தங்கள், எக்கணமும் மரணம் நேரலாம் என்னும் நிலை, இவ்விதமாக நிரந்தரச் சுகமற்றது மனித வாழ்க்கை. காண நேரமே ஏற்படும் மகிழ்ச்சியால் என்ன பிரயோஜனம்?
பளிச்சென்று ஒளி வீசி மறையும் மின்னலைப் போன்றும் காண நேரத்தில் தோன்றி மறையும் கடலலையைப் போன்றும் அநித்தியமானவை உடல் இன்பங்கள். இதைப் பற்றிச் சிறிது யோசியுங்கள்.
உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப் போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய் தந்தையரின் பாதைகளைத் தோள்மேல் சுமந்து சென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலை பற்றிய உண்மையை உணர்வதில்லை
அவனுக்கு முன்னால் இறந்து போனவர்கள் சென்ற பாதையிலேயே செல்கிறான் ஜனன மரணச் சூழலில் மாடிக் கொள்கிறான். இச் சூழலிருந்து வெளிவரவது எப்படி என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை.
குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதிலேயே வாழ்க்கை வேகமாகக் கழிந்து விடுகிறது. ஆனால், காலதேவனோ ஆண்டுகள் கழிவதை மிக அக்கறையுடன் கவனித்துக் கொண்டு வருகிறான். கடமையிலிருந்து ஒரு போதும் நழுவ மாட்டான்.
கடைசி நேரம் வரும்போது காலதேவன் ஒரு கணமும் தாமதிக்க மாட்டான் மீன்பிடிப்பவன் வலையை இழுப்பது போல் இறுக்கமாக இழுத்துவிடுவான். அந்நேரத்தில் மனிதன் வலையில் அகப்பட்ட மீனைப் போல ஏதும் செய்ய முடியாது துடி துடிப்பான்.
கோடிப் புண்ணியம் செய்தும், மகாபாக்கியங்களாலும் இம் மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்த நல்வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் மனிதப் பிறவியை அடைய முடியாது. அது விதி வசமாகக் கிடைக்கும் அதிர்ஷ்டமே. வீணாக குப்பைத் தொட்டியில் போட்டு விடாதீர்கள்.
இந்த ஜன்மத்தில் கிடைத்தது கைவிட்டு போனாலும், அடுத்த ஜன்மம் மனிதப் பிறவியாகவே அமையும் என்று நினைத்து, அடுத்த ஜன்மத்திற்கென்று எதையும் தள்ளிப் போடுபவன் முட்டாள்.
உடலைக் கேவலம் உன் வேலைக்காரனாக நடத்து. அளவுக்கதிகமாக அதைப் பாராட்டாதே . அதற்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்து உன்னை நரகத்திற்கு இழுத்துக் கொண்டு போய் விடாதே.
அதற்கு உணவும் உடையும் தேவையான அளவு கொடுத்து நிர்வாகம் செய். அவ்வப் போது போஷித்துப் பாலனம் செய். அவ்விதம் செய்தால்தான் உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜனனமரணச் சூழலிருந்து விடுபடுவதற்கும் உபயோகிக்க முடியும்.
ஜனன மரண அனர்த்தங்கள், எக்கணமும் மரணம் நேரலாம் என்னும் நிலை, இவ்விதமாக நிரந்தரச் சுகமற்றது மனித வாழ்க்கை. காண நேரமே ஏற்படும் மகிழ்ச்சியால் என்ன பிரயோஜனம்?
பளிச்சென்று ஒளி வீசி மறையும் மின்னலைப் போன்றும் காண நேரத்தில் தோன்றி மறையும் கடலலையைப் போன்றும் அநித்தியமானவை உடல் இன்பங்கள். இதைப் பற்றிச் சிறிது யோசியுங்கள்.
உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப் போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய் தந்தையரின் பாதைகளைத் தோள்மேல் சுமந்து சென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலை பற்றிய உண்மையை உணர்வதில்லை
அவனுக்கு முன்னால் இறந்து போனவர்கள் சென்ற பாதையிலேயே செல்கிறான் ஜனன மரணச் சூழலில் மாடிக் கொள்கிறான். இச் சூழலிருந்து வெளிவரவது எப்படி என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை.
குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதிலேயே வாழ்க்கை வேகமாகக் கழிந்து விடுகிறது. ஆனால், காலதேவனோ ஆண்டுகள் கழிவதை மிக அக்கறையுடன் கவனித்துக் கொண்டு வருகிறான். கடமையிலிருந்து ஒரு போதும் நழுவ மாட்டான்.
கடைசி நேரம் வரும்போது காலதேவன் ஒரு கணமும் தாமதிக்க மாட்டான் மீன்பிடிப்பவன் வலையை இழுப்பது போல் இறுக்கமாக இழுத்துவிடுவான். அந்நேரத்தில் மனிதன் வலையில் அகப்பட்ட மீனைப் போல ஏதும் செய்ய முடியாது துடி துடிப்பான்.
கோடிப் புண்ணியம் செய்தும், மகாபாக்கியங்களாலும் இம் மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்த நல்வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் மனிதப் பிறவியை அடைய முடியாது. அது விதி வசமாகக் கிடைக்கும் அதிர்ஷ்டமே. வீணாக குப்பைத் தொட்டியில் போட்டு விடாதீர்கள்.
இந்த ஜன்மத்தில் கிடைத்தது கைவிட்டு போனாலும், அடுத்த ஜன்மம் மனிதப் பிறவியாகவே அமையும் என்று நினைத்து, அடுத்த ஜன்மத்திற்கென்று எதையும் தள்ளிப் போடுபவன் முட்டாள்.
No comments:
Post a Comment