valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 4 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பணம் என்பது ஒரு கண்ணி. பெரியோர்களும் பணக்காரர்களும் கூட அதன் அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. வீரபத்ரனையும் அவ்வப்பொழுது பணத்தட்டுப்பாடு கிள்ள ஆரம்பித்தது. பணத்தின் சேஷ்டை அத்தகையது! 

"பாபா, இல்லறத்தின் தளைகள் மிகத் துன்பமூட்டுபவை.  பணத்தட்டுப்பாட்டால் நான் துன்பப்படுகிறேன். குடும்பப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு வழி காட்டுங்கள். -

"உங்களுடைய பாதங்களில் விழுகிறேன். இவ்விதம் என்னை ஏமாற்றுவது தகாது. என்னுடைய சங்கடத்தை நிவாரணம் செய்யுங்கள். நீர்தான் என்னுடைய திருமணத்திற்குக் காரண கர்த்தா!"

நானும் அவனுக்குப் பல தருணங்களில் போதனை அளித்தேன்.  "இதை அல்லா மாலிக்தான் அறிவார்.  அவர்தான் உன் சங்கடத்தையும் நிவாரணம் செய்வார்" எண்டு சொல்லி அவனைப் பிரேமையுடன் ஆசீர்வாதமும் செய்தேன். 

வீரபத்ரனின் மனப்போக்கை அறிந்து, அவனுடைய மனோரதம் நிறைவேறவேண்டும் என்பதற்காக நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். 'சிறிதளவும் கவலைப்பட வேண்டா' என்றும் சொல்லுவேன். -

"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாகக் கிளர்ச்சியடையாதே.  கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்குச் செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதியாவாய்". (பாபாவின் நல்வாக்கு)

"செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ 'இந்தக் கொண்டுவா, அதைக் கொண்டுவா' என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கௌரவமே வேண்டா" (வீரபத்ரனின் பதில்) 

ஆனால், பின்னர் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கௌரியின் கிரகயோகத்தைப் பாரும்! தரிசு நிலத்தின் மதிப்பு திடீரென்று உயர்ந்தது. இறைவனின் லீலை மனித அறிவுக்கெட்டாதது!

ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்கத் தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார். பாதிப்பணத்தை ரொக்கமாக கொடுத்தார். மீதிப்பணத்தைத் தவணைகளில் செலுத்துவதாக வாக்களித்தார். 

அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ரூபாய், வட்டியுடன் சேர்த்துச் செலுத்தவேண்டும் என்றும், இவ்விதமாக மீதிப்பணம் முழுவதையும் அடுத்த இருப்பைத்தந்து ஆண்டுகளுக்குள் கொடுத்துத் தீர்த்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்முறையில் கௌரி பெரும்பணம் சேர்ப்பாள். 

இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சனபசப்பா எழுந்து நின்று சொன்னான், "சங்கரருக்கு எது சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு எஜமானன் குரவர் வம்சத்தவனே".

அவன் மேலும் சொன்னான், "வருடாந்திர வட்டியில், குரவரின் பங்கான பாதி வட்டித்தொகை என்னிடம் வந்து சேரவேண்டும். அது வராமல் நான் திருப்தி அடையமாட்டேன்."


 

No comments:

Post a Comment