valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"சிறிய தொகையை விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள்; பெரிய தொகையின்மீது ஆசை காட்டவில்லை. நான் உங்களுடைய ஸ்தானத்தில் (பதவியில்) இருந்திருந்தால் இந்த ரீதியில் செயல்பட்டிருக்கமாட்டேன்!"

"சாம்யா (சாமா), உனக்கு புரியவில்லை! நானென்னவோ எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதிமாயி! கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.-

"எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்? எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன். -

"கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றிலிருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (சப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய். உன்னை அதிலிருந்து விடுவிப்பதற்கு நான் படாத பாடு படவேண்டியிருந்தது. -

"தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடியபிறகு அதைபற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்!-

"ஆரம்பகாலத்தில் இந்த மனிதர் ஏழையாக இருந்தார். ரூ. 15 /- கிடைத்தால், முதல் சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். ஆனால், பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.

"பதினைந்து முப்பதாகி, முப்பது அறுபதாகி, அறுபது நூறாகியது. அவருடைய சம்பளம் இரண்டு மடங்காகவும் பின்பு நான்கு மடங்காகவும் ஆக ஆக, அவருடைய மறதியும் அதிகமாகியது! -

"காலக்கிரமத்தில் அவர் ரூ. 700 /- சம்பாதிக்க ஆரம்பித்தார். கர்மவசத்தால் (நல்வினைப்பயனால்) இன்று இங்கு வந்திருக்கிறார். ஆகவே, தக்ஷிணை என்ற பெயரில் அவரிடமிருந்து என்னுடைய பதினைந்து ரூபாயைக் கேட்டேன். -

"இப்பொழுது இரண்டாவது கதையைக் கேட்பாயாக. ஒரு காலத்தில் நான் சமுத்திரக் கரையோரமாக தெரிந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய மாளிகையைப் பார்த்தேன்; மாளிகையின் வராந்தாவில் உட்கார்ந்தேன்.-

"அந்த மாளிகையின் எஜமானர் ஒரு பிராமணர்; நல்ல வம்சத்தில் பிறந்தவர். பணக்காரர். அவர் என்னை அன்புடன் வரவேற்று யதேஷ்டமாக (நிரம்ப) அன்னமும் பணமும் அளித்தார். -

"அதன் பிறகு அதே இடத்தில், சுவரில் உள்ளடங்கிய அலமாரி இருந்த இடத்திற்கு அருகில், சுத்தமானதும் சுந்தரமானதுமான ஓரிடத்தில் என்னைத் தூங்குவதற்கு அனுமதித்தார். நான் அங்கே படுத்துத் தூங்கிவிட்டேன். -

"நான் ஆழ்ந்து தூண்வயத்தைப் பார்த்து, சுவரிலிருந்த நகரக்கூடிய கல் ஒன்றைப் பெயர்த்துவிட்டுத் திருடன் ஒருவன் உள்ளே புகுந்துவிட்டான். என்னுடைய பாக்கெட்டைக் கிழித்து என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.-





No comments:

Post a Comment