ஷீர்டி சாய் சத்சரிதம்
அண்ணன் மகன் சிறுவயதினன்; வேதனையைப் பொறுக்க
முடியாது தவித்தான்; பிராண அவஸ்தைப்பட்டான். இதைக் கண்ட நெருங்கிய
உறவினர்கள் மனமுடைந்து போயினர்.
எல்லாவிதமான உபாயங்களும்
செய்யப்பட்டன; வியாதி சிறிதளவும் குறையவில்லை. ஆகவே, நெருங்கிய
உறவினர்களும் நண்பர்களும் சம்பதிகளும், "தேவதைகளை ஆராதனம் செய்யலாம்" என்று
கூறினர்.
தெய்வமும் தேவதைகளும் குலதேவதையும்
திருப்திசெய்யப்பட்டன. இவற்றில் எதுவும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுதுதான்
டாக்டருக்கு ஷிர்டியில் ஓர் அவ்லியா வசித்துவந்தது தெரிந்தது.
அவர்
சாயி மஹராஜ்; யோகீசுவரர்; ஞானிகளில் தலைசிறந்தவர்; அவருடைய தரிசனம் ஒன்றே
வியாதிகளை பரிஹாரம் செய்கிறது. இதைத்தான் டாக்டர் கேள்விப்பட்டார்.
ஆகவே
சாயி தரிசனம் செய்ய விருப்பம் ஏற்பட்டது. தாயும் தந்தையும் தெய்வத்தின்
பெயரில் இந்த நிவாரணத்தைச் செய்து பார்க்கலாம் என்று நிச்சயித்தனர்.
"அவர்
மிகப் பெரிய அவ்லியா என்றும் அவருடைய கையால் உதீ தடவினால், தீராத கொடிய
வியாதிகளும் குணமடைகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதை முயன்று
பார்ப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?
"வாருங்கள் போவோம்;; அவருடய
பாதங்களை வந்தனம் செய்வதற்கு. இந்தக் கடைசி முயற்சியையும்
செய்துபார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்! இதுவே கடைசி
உபாயம்!
ஆகவே தாயும் தந்தையும் ஏற்பாடுகளை செய்துகொண்டு சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு உடனே சென்றனர்.
ஷீர்டி
வந்து சேர்ந்தவுடன் சாயி தரிசனம் செய்து பாதங்களை நமஸ்காரம் செய்துவிட்டு,
அவருடைய சந்நிதியில் நின்றுகொண்டு பாலனின் துக்கத்தை விவரித்தனர்.
கூப்பிய கைகளுடன் கூம்பிய முகங்களுடன் சோகம் ததும்பிய குரலில் சாயியைப் பிரார்த்தனை செய்தனர், -
"இந்த
பாலன் வியாதியால் பீடிக்கப்பட்டு வேதனைப்படுகிறேன். இவனுடைய துக்கத்தைப்
பார்க்க எங்களுக்கு சகிக்கவில்லை; அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
எங்களுக்கு கதிமோட்சம் என்னவென்று தெரியவில்லையே!
"ஓ, சமர்த்த
சாயியே! புத்திரன் படும் பாட்டைப் பார்த்து துக்கப்பட்டுக்
களைத்துவிட்டோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய
வியாதியை நிவாரணம் செய்யுங்கள்.-
"உங்களுடைய மஹிமையைக்
கேள்விப்பட்டு நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம்.
அனன்னிய பாவத்துடன் உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு இவனுடைய உயிரை தானமாக
விடுங்கள்!"
கருணாமூர்த்தியின் சாயி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், "இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்கதி (கெடுகதி) அடையமாட்டார்கள்; யுகம் முடியும் காலம் வரை .-
No comments:
Post a Comment