valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, சந்தனம், அக்ஷதை, மலர்கள் இவற்றால் பூஜை சையது நைவேத்தியமும் சமர்ப்பணம் செய்துவந்தார். 

எப்பொழுது என் கர்மவினைகள் தீரும்? எப்பொழுது சாயியை பிரதக்ஷயமாக தரிசனம் செய்யும் யோகம் கிடைத்து, என் ஏக்கம் நிறைவேறும்? இதுவே ஆப்பாவின் இதயதாபமாக இருந்தது. 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயியை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனால், பாவமென்னவோ பூரணமாக இருக்க வேண்டும். 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதையொன்றைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். 

பலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த கீர்த்தங்கர் (பஜனை செய்பவர்) ஒருவர், நவீன துகாராம் என்று புகழ் பெற்றவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்குச் சென்றார். 

அதுதான் அவருடைய முதல் தரிசனம். அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார். 

"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்". பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். 

"பாபா ஷிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ ஷிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?"

இதுபற்றித் திரும்பத் திரும்ப யோசித்தபின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்திற்கு ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. 

பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. அவர் நினைத்தார், "ஞானியரின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவர்களுக்கு இருக்கும் தாயன்பையும் பாரீர்!-

"இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாக காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!-

"ஆயினும், 'நான் மறந்துவிட்டேன்' என்று சொல்வது சரியாகாது. நான் நிழற்படத்திற்கு நமஸ்காரம் செய்ததைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை உடனே புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் என்னிடம் இல்லாததுதான் குறை.-

"பாபாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது; எனக்கு அது கொஞ்சங்கூட தெரியவில்லையே! ஞானிகள் ஞாபகமூட்டும்போதுதான் எல்லாமே மனத்திரைக்குத் திரும்பிவருகின்றன. 

எவ்வாறு நிர்மலமான தண்ணீரிலும் கண்ணாடியில் நம்முடைய பிரதிபிம்பத்தைப் பார்க்கிறோமோ, அவ்வாறே நிழற்படமும் ஒரு பிரதிபிம்பம்; மூல உருவத்தின் தெளிவான பிரதி. 


  

No comments:

Post a Comment