valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 February 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்


பிறகு, உடல் சமாதியில் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ பாபாவை இரண்டு தடவைகள் தரிசனம் செய்திருந்தார்.


சமாதி  கட்டிய பிறகு மூன்று ஆண்டுகள் கழிந்தன. தரிசனம் செய்யவேண்டுமென்ற பலமான ஆவல் இருந்தும் அவருக்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இது அவருடைய மனத்தை நிம்மதி இழக்கச் செய்தது.


பாபா மஹாசமாதியான பின் ஓர் ஆண்டு கழித்து நாராயண் ஜனீயை வியாதிகள் பிடித்துவாட்டின. உலக வழக்கிலிருந்த அத்தனை மருந்துகளும் உபசாரங்களும் கையாளப்பட்டன.  எதுவும் பலனளிக்கவில்லை.


துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும், ஜனீ இரவுபகலாக பாபாவை தியானம் செய்தார். குருராஜருக்கு மரணமும் உண்டோ! பாபா ஜனீக்கு தரிசனம் அளித்தார்.


ஜனீ ஒருநாள் இரவில் கனவு கண்டார். கனவில், சாயி பூமிக்கு கீழேயிருக்கும் ஒரு நிலவறையில் இருந்து வெளிவந்து ஜனீ க்கு அருகில்  நின்று கொண்டு அவரிடம் ஆறுதலாக பேசினார்,-


"மனத்தில் கவலையைத் தேக்காதீர்; நாளை உதயகாலத்திலிருந்து நிவாரணம் ஆரம்பிக்கும். எட்டு நாள்களில், நீரே சுயமாக எழுந்து உட்காருவீர்".

எட்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. பாபாவின் திருவாய்மொழி எழுத்துக்கெழுத்து உண்மையாகியது. நாராயண் ஜனீ மறுபடியும் எழுந்து நடமாட ஆரம்பித்தார். அவருடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை.


இவ்வாறு சில நாள்கள் கடந்தன. நாராயண் ஜனீ சமாதி தரிசனத்திற்காக ஷிர்டிக்கு வந்தார். அந்த சமயத்தில் இந்த அனுபவத்தை விவரமாக சொன்னார்.


பாபா பூதவுடல் தரித்திருத்தபோதுதான் உயிரோடிருந்தார் என்றோ, சமாதி ஆகிவிட்டதால் மரணமடைந்து விட்டார் என்றோ, நாம் எப்படி நினைக்கவோ சொல்லவோ முடியும்? பாபா ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; நகரும் நகராப் பொருள்கள் அனைத்தும் நிறைந்த சிருஷ்டியையே வியாபித்திருக்கிறார் அல்லரோ!


அரணிக் கட்டையினுள் மறைந்திருக்கும் தீ, கடைந்தால் எப்படி வெளிப்படுகிறதோ அப்படியே பக்தர்களுக்கு சாயி!


ஒருமுறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால், அவர் ஜென்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். அனன்னிய பிரேமையைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் வேண்டுவாரில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார்!


அந்நேரத்தில் காலமோ இடமோ அவருக்கு குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குத் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.


இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, அவருடைய பாதங்களின் மேல் மனத்தைச் செலுத்தினால், தியானமும் தாரணையும் (மனம் ஒருமுகப்படுதல்) விருத்தியடையும்.  




No comments:

Post a Comment