valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அவர்கள் முன்னேறியபோது, பாம்பு மிரீகரின் இடுப்பை வீட்டுக் கீழே இறங்கியதைப் பார்த்தனர். அவர்களுக்கு அது ஒரு பாம்பு இறங்குவதற்காகத் தெரியவில்லை; உயிரைக் குடிக்கக்கூடிய பெரும் ஆபத்தின் முழுவுருவமே இறங்கி வருவது போலத் தெரிந்தது.

கிரஹணம் சீக்கிரமாகவே விடுபட்டது! பாம்பு கீழே இறங்கி வந்தவுடன் அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்களெல்லாம் பாம்பின் மேல் மின்னலெனப் பாய்ந்து அதைக் கண்ட துண்டங்களாக்கி விட்டன.

இவ்விதமாக கண்டத்தில் இருந்து தப்பித்த மிரீகர் உணர்ச்சிவசப்பட்டார்.  சமர்த்த சாயியின் மீதிருந்த பிரேமை பொங்கி வழிந்தது.

உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பிரேமை கண்ணீராகப் பொழிந்தது. "ஓ, எப்பேர்ப்பட்ட ஆபத்து விலக்கப்பட்டது! பாபாவுக்கு இது முன்கூட்டியே எப்படித் தெரிந்திருந்தது?-

"உண்மையிலேயே பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டேன்! எவ்வளவு சரியான சமயத்தில் பாபா என்னை எச்சரித்தார்! தேவையில்லை, வேண்டாவென்று நான் சொன்ன போதிலும், சாமாவை  டாங்காவில் உட்காரவைத்து எனக்கு உதவியாக அனுப்பினார்.-

"வாஸ்தவமாகவே அவர் தயா சாகரம்! நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் ஞானந்தான் என்னே! கெட்ட காலம் எதிர் கொண்டிருப்பதை அறிந்து, சரியான அறிவுரை தந்தார்."

தம்மை தரிசனம் செய்வதின் மஹாதமியத்தையும் மசூதியின் பெருமையையும் பாபா அவர்களுடைய மனத்தில் பதியச் செய்தார். இந்த லீலையின் மூலமாக, 'தமக்கு பக்தர்களின் மீதிருக்கும் பிரேமையை சுலபமாக எடுத்துக்காட்டினார்.

இப்பொழுது நானா டெங்கலே என்ற பெரிய ஜோதிடர், ஸ்ரீமான் புட்டிக்கு ஒரு சமயம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

"இன்று உங்களுக்கு அமங்கலமான நாள்; ஒரு கண்டம் நேரவிருக்கிறது. ஆயினும் தைரியமாகவும் விழிப்புடனும் இருங்கள்."

டேங்கலே இவ்வாறு சொன்னைதை கேட்ட பாபூசாஹெப் புட்டி கலவரமடைந்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தார். நாள் நகர மறுத்தது!

பிறகு, பாபு சாஹேப்  புட்டியும் நானா டேங்கலேவும் மற்றவர்களும் தினமும் செல்லும் நேரத்தில் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னிலையில் அமர்ந்தனர்.

பாபா பளிச்சென்று கேட்டார், "இந்த நானா டேங்கலே என்ன சொல்கிறார்? அவர் உம்மைக் கொன்று விடத் திட்டமிட்டு விட்டாரோ! ஆனால், நாம் பயப்பட வேண்டியதில்லை!-

"அவர் உம்மை எப்படிக் கொல்கிறார் என்று பார்த்துவிடுவோம்! உம்மால் முடிந்தால் என்னைக் கொன்றுவிடும் என்று தைரியமாக அவரிடம் சொல்லும்!" இந்த சம்பாஷணை முடிந்தபிறகு நடந்த அற்புதம் என்னெவென்று பார்ப்போம்.    


No comments:

Post a Comment