ஷிர்டி சாயி சத்சரிதம்
"என் குரு ஒரு புகழ் பெற்ற அவ்லியா (முஸ்லீம் ரிஷி), கருணைக் கடல். நான் அவருக்கு சேவை செய்து செய்து, களைத்து போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஓதினாரில்லை.-
"அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தை பெற்றுவிட வேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.-
"ஆரம்பித்தில் அவர் என்னை இரண்டு பைசா மாத்திரம் கொடுக்ககச் சொல்லி ஏய்த்து விட்டார். உடனே நான் இரண்டு பைசாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்-
"என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறை வேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைசா கேட்டார்? சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்ல முடியும்?
"ஆனால், இம்மாதிரியான சந்தேகங்கள் ஏதும் உம்முடைய மனத்தை துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு?
"விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைசாக்கள்; வேறெதுவும் இல்லை! நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷம் அடைந்தார். -
"தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். -
"இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்வங்களையும் சாமர்த்தியாமாக தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டி விடுகிறது.-
"பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துக்களை பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனை இல்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.-
"சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவை இரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.-
"சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.-
"குரு மஹா பலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
"என் குரு ஒரு புகழ் பெற்ற அவ்லியா (முஸ்லீம் ரிஷி), கருணைக் கடல். நான் அவருக்கு சேவை செய்து செய்து, களைத்து போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஓதினாரில்லை.-
"அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தை பெற்றுவிட வேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.-
"ஆரம்பித்தில் அவர் என்னை இரண்டு பைசா மாத்திரம் கொடுக்ககச் சொல்லி ஏய்த்து விட்டார். உடனே நான் இரண்டு பைசாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்-
"என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறை வேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைசா கேட்டார்? சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்ல முடியும்?
"ஆனால், இம்மாதிரியான சந்தேகங்கள் ஏதும் உம்முடைய மனத்தை துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு?
"விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைசாக்கள்; வேறெதுவும் இல்லை! நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷம் அடைந்தார். -
"தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். -
"இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்வங்களையும் சாமர்த்தியாமாக தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டி விடுகிறது.-
"பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துக்களை பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனை இல்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.-
"சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவை இரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.-
"சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.-
"குரு மஹா பலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
No comments:
Post a Comment