valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 13 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சாடே ஏழு நாள்களில் குரு சரித்திரத்தை ஒரே ஒருமுறைதான் படித்தார். கடந்த நாற்பது வருடங்களாக படித்துக் கொண்டிருக்கும் எனக்குப் பலனேதும் இல்லையா?-

"ஒருவர் ஏழு நாள்களிலேயே பலனை அனுபவிக்கிறார். மற்றவர் (ஆசிரியர்) ஏழு வருஷங்களாக பலனேதுமில்லாமல் இருக்கிறார். இக் கருணை மேகம் எப்பொழுது அருள்மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சாதகப் பறவையைப் போல நான் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். -

"ஞானிகளுள் மணிமாகுடமானவர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள் என்றைக்கு வரும்? என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா?"

பக்தவத்சலரான சாயி என்ன அற்புதம் செய்தார் என்று பாருங்கள்! என்னுடைய மனதில் இவ்வெண்ணம் எழுந்த உடனேயே அவருக்கு தெரிந்து விட்டது.

இம்மாதிரியான (என்னுடையது போன்ற) அஞ்ஞானத்தினால், கோடிக்கணக்கான நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் பக்தர்களின் மனதில் எழுகின்றன. பாபாவுக்கு இவை அனைத்தும் தெரியும்.

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லாருக்கும் நிச்சயமாக தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்; மகாராஜருக்கு உடனே தெரிந்துவிடும்!

ஆயினும் பரமகிருபையுள்ள அன்னை (சாயி), நிந்தனையான எண்ணங்களை மன்னித்து ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையான நல்லெண்ணங்களுக்கு, நல்வாய்ப்பு வரும்போது ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறார்.

ஆகவே, என்னுடைய எண்ணத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா என்னிடம் கூறினார், "எழுந்திரும், போய் அந்த சாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வாரும்.-

"அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பரஸ்பரம் சம்பாஷனை செய்துவிட்டு அவர் கொடுக்கும் தக்ஷினையை வாங்கிகொண்டு திரும்பி வாரும்."

சாயிநாதர் எனக்கு அருள் செய்யக் கருணை கொண்டதால், தக்ஷிணை என்னும் சாக்கில், "உடனே சென்று, என் சார்பாக சாமாவிடம் பணம் கேளும்" என்று கூறினார்.

 இவ்விதமான ஆக்ஞை பிறந்த பிறகு, எவருக்கு அவர் முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கும் திமிர் இருக்கும்? அது கீழ்ப்படியாத செயலாகிவிடும் அன்றோ! ஆகவே, அனுமதி பெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.

நான் உடனே கிளம்பினேன். சாமாவும் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

ஸ்நானம் செய்தவுடன் சுத்தமான மடிவேட்டியை அணிந்து கொண்டு நாமஜபம் செய்துகொண்டே கச்சத்தை சரிசெய்து கொண்டிருந்தார்.

அவர் வினவினார், "என்ன, இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்? மசூதியில் இருந்து வருகிறீர் போல் தெரிகிறதே! ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம்? இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர்?-


No comments:

Post a Comment