valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"மக்கள், மாடு கன்று , பொருள் தேடுதல், முதலியவற்றிலேயே  மூழ்கிப் போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்?-

"பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதில் இருந்து தப்பிக்க முடியும். -

"பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக் குவிப்பிற்கோ தியானத்திற்கோ  நேரம் இருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும்? பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை .-

"பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை; நிம்மதியில்லை. பேராசை மனதுள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.-

"சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக் கூடாது' என்று விதிக்கப்பட்ட காரியங்களையே  முழுதும் செய்து கொண்டிருக்கும் மனிதருக்கு சாந்திஎன்பதே இருக்காது. -

"இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப் போன மனம்' என்று பெயர். புலனின்ப சேற்றில் உழன்று கொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.-

"அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். ஆருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.-

"யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முதலில் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர். -

"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்.-

"இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .-

"ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.-

"என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன். -


No comments:

Post a Comment