valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது; ஆகாயத்தைப் போன்று கடக்க முடியாது; வேறெதையும் சாராதது; தூய்மையானது. ஓம் எனும் பிரணவமே அதற்கு ஆதாரம்.

அறிய வேண்டியது பர பிரம்மம்; அடைய வேண்டியது அபர பிரம்மம் (உருவமெடுத்த கடவுள்); அதனுடைய சின்னமாக எப்பொழுதும் தியானிக்கப் பட வேண்டியது ஓம்.

எது வேதங்களால் நிர்ணயிக்கப்பட்டதோ, எது பிரம்மச்சரியத்தாலும் மிகத் தீவிரமான பிரயதனங்களாலும் அடையப்படுகிறதோ, அதுவே ஓம் எனும் பிரணவத்தின் உயர்ந்த நிலை.

ஆயினும் இந்நிலைக்கு உயர்வதென்பது மிகக் கடினமாகும். எவர் நன்கு அப்பியாசம் செய்கிறாரோ அவருக்கு குருவின் கிருபை கிடைக்கும்போது இந்நிலை சுலபமாக எட்டிவிடுகிறது.

ஓய்வடையாத சாதகர், தூலமான உடலின் பல அங்கங்களில் ஆரம்பித்துக் கடினமான பயிற்சிகளால் இக சூக்குமமான தாரதம்மியம் (ஒப்பு வித்தியாசம்) தெரிந்த பக்குவத்தை அடையும்போது இந்நிலை சித்தியாகிறது.

வாயினால் ஓத வேண்டிய சப்தமான ஓம் எனும் அக்ஷரம் எல்லாத் தவங்களின் சாரமாகும். உச்சாரணம் செய்தால் தன்னுடைய பொருளின் சாரத்தை உணர்விக்கும். பல ஆவர்த்தங்கள் (சுற்றுகள்) ஜபம் செய்தால் இறைவனை காட்டும்.

வளர்ச்சியோ அழிவோ மாற்றமோ அடையாத, எங்கும் நிறைந்த, சைதன்யமான ஆத்மாவை அறியும் சத்குருவின் அனன்னிய (வேறெதையும் நாடாத) பக்தன் மகா பாக்கியசாலி.

ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்னும் மூன்று தாபங்களால் சதா தவிப்பவன் எவ்விதம் அந்த பாக்கியத்தை அனுபவிப்பான்? அது ஞானிகளுக்கே உண்டான வைபவம்.

அஞ்ஞானத்தால் பிறப்பு இறப்பென்னும் சுழற்சி ஏற்படுகிறது. தானும் பிரம்மமும் ஒன்றே என்ற ஞானத்தல்தான் இதிலிருந்து விடுபட முடியும். இதை ஞானிகளின் மூலமாகத்தான் அடைய முடியும்.

உலக விஷயங்களையும் கற்பனைகளையும் சூன்யமாக்கிவிட்டு, 'நான் பிரம்மமாக இருக்கிறேன்' என்னும் வேதமஹா வாக்கியத்தை பல ஆவிருத்திகள் ஜபம் செய்தால் புத்திக்கு அதுவே தொழிலாகிவிடுகிறது. 


No comments:

Post a Comment