valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 April 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஷீரடிக்கு போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப் பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை ஷீரடியில் தங்க முடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்க வேண்டும்!

சுயமுற்சிகளால் மட்டும் எவரும் ஷிர்டிக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவலிருந்தாலும் விருப்பப் பட்ட நாள் வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்க விட்டு, "போய் வா" என்று அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேர்ந்தது. 

காகா மகாஜனி ஒருமுறை ஷீரடியில் ஒருவாரம் தங்கே வேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயிலிருந்து ஷீரடிக்கு வந்தார். 

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப் படும். பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக் கூத்தாடுவர்.

மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி பண்டிகையின் கோலாகலங்களில்  நேரில் கலந்து கொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்து விட்டார். 

ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார். "ஆக, எப்பொழுது நீர் வீடு திரும்ப போகிறீர்? இதைக் கேட்ட மகாஜனி திடுக்கிட்டார். 

"என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியை கேட்டார்? என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் ஷீரடியில் எட்டு நாள்கள் தங்க வேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார். 

பாபா கேள்வியை கேட்ட விதத்திலேயே என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார்.  இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது. 

"எப்பொழுது பாபா ஆக்ஞை இட்டாலும் அப்பொழுது வீடு திரும்பி விடுகிறேன்" என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலுக்கு  காகா சொல்லிக் கொண்டிருந்தபோதே "நாளைக்கே வீடு திரும்பிவிடும்" என்று பாபா சொல்லி விட்டார். 

பாபாவினுடைய ஆக்ஞையை சிரசின் மேல் ஏற்றுக் கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்து விட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளி வைத்து விட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பி விட்டார் காகா. 

வீட்டை அடைந்த பின் அலுவலகத்திற்கு சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காக சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்து பார்த்துக் கொண்டிருந்ததை கண்டார். 

முதலாளியின் மணிக் காரர் திடீரென்று நோய் வாய்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவரசரமாக தேவைப் பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்லி ஷீரடிக்கு ஏற்கனேவே கடிதம் அனுப்பியிருந்தார்!


No comments:

Post a Comment