valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 3 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்விலிருந்து நிவிர்த்தி அடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளிலிருந்து  விடுபட்டவரோ, எவர் முழுமுதற் பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்து விட்டாரோ , அவர் தூய ஆனந்தத்தின்  உருவமாவார். 

வேதம் "ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற் பொருள் )" என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தக ஞானிகளுக்கும் இதைப் புராணங்களில் படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை ஷீரடியில் அனுபவிக்கிறார்கள். 

தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்க வேண்டும். 

பாபா எல்லாருக்குமே அதிர்ஷ்டமானவர். அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார். 

அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர். 

உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப் பட்டது. பக்தர்களுடைய மனதின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக் கொண்டார். 

ஷிரிடியிலிருப்பதுபொல்  தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாக சுற்றி வந்தார். இந்த அனுபவத்தை தான் சாயி எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார். 

பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக் கொண்டார். எல்லாரிடமுமிருந்தும் அவரவருடைய சமயாசார வழக்கங்களின்படியும் பக்தர் விரும்பியவாரும் பூஜையை ஏற்றுக் கொண்டார். 



No comments:

Post a Comment