valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர் வாழ் பிராணி - பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவி வருகிறேன்.

"உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்பிகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேத புத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."

இவை வெறும் வார்த்தைகளல்ல; தேவமிருமதமான திருவாய் மொழியாகும். இதைக் கேட்ட அம்மையார் உணர்ச்சிவசத்தால் திக்குமுக்காடிப் போனார்; தொண்டை அடைத்தது; ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

இவ்வம்மையாரின் அன்பார்ந்த பக்தியை விளக்கும் இன்னுமொரு இனிமையான காதலி உண்டு. சமர்த்த  சாயி, பக்தர்களுடன் ஐக்கியமானவர் என்பதற்கு அது நிரூபணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சமயம் புரந்தரே என்ற பெயர் கொண்ட சாயி பக்தரொருவர் மனைவி மக்களுடன் ஷ்ரிடிக்கு  கிளம்பினார். இவ்வம்மையார் (ஸ்ரீ மதி தர்கட் ) அவர் மூலமாக பாபாவுக்குச்  சில கத்தரிக்காய்களை அனுப்பினார்.

ஒரு கத்தரிக்காயை பரீத் செய்தும் இன்னொன்றை காச்ர்யா செய்தும் பாபாவுக்கு திருப்தியாக உணவளிக்கும் படியாகப் புரந்தறேவின் மனைவியை வேண்டிக் கொண்டார்.

"அவ்வாறே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீமதி புரந்தரே கத்தரிக்காய்களை
எடுத்துக் கொண்டு போனார். ஷீரடிக்கு போய்  பரீத் செய்து எடுத்துக் கொண்டு பாபாவுக்கு அளிப்பதற்காக மதிய உணவு நேரத்தில் ஹாரத்திக்கு பிறகு சென்றார்.

எப்பொழுதும் போல் நைவேத்தியத்தை ஒரு தட்டில் பாபாவுக்காக வைத்துவிட்டு தங்குமிடத்திற்கு சென்று விட்டார். எல்லாருடைய நைவேத்தியங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பாபா சாப்பிட உட்கார்ந்தார்.

பாபா பரீதை ருசி பார்த்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் பாபா அதை மிகவும் சுவைத்து உண்டார் என்று நினைத்தனர். காச்ர்யா சாப்பிட வேண்டுமென்று நினைத்தாரோ என்னவோ, "காச்சர்யா உடனே கொண்டு வா" என்று சொன்னார்.

உடனே ராதாகிருஷ்ணா பாயிக்கு, "பாபா காச்ர்யா சாப்பிட விரும்புகிறார்" என்று செய்தி அனுப்பப் பட்டது. பாபா சாப்பிட ஆரம்பிக்காமல் காச்ர்யாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அது கத்தரிக்காய் கிடைக்க கூடிய பருவம் அன்று. எப்படி காச்ர்யா செய்ய முடியும்? பரீத் நைவேத்தியம் கொண்டு வந்து வாய்த்த ஸ்ரீ மதி புரந்த்ரேவை உடனே வலை போட்டுத் தேடினர்.


No comments:

Post a Comment