valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 June 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எந்த ஐந்து யக்யங்களை செய்யாமல் இல்லறத்தோர் உணவருந்தக் கூடாதோ, அந்த ஐந்து யக்யங்க்ளை பாபா ஷீரடியில் தினமும் நடத்தி வைத்தார். இவ்விதமாக ஷிர்டி மக்கள் சமைத்த உணவு புனிதமாகியது.

ஒவ்வொரு நாளும், இல்லறத்தோர் அதிதிக்கு (எதிர்பாராத விருந்தினருக்கு ) முதலில் உணவளிக்க வேண்டிய கடமையை நினைவுறுத்தும் வகையில், அவர் தினமும் ஐந்து வீடுகளுக்கு சென்றார்.  வீட்டில் உட்கார்ந்தவாறே இப்பாடத்தைக் கற்றுக் கொண்ட கிருஹஸ்தர்கள் பாக்கியசாலிகள்!

ஐந்து மகா யக் யங்களை செய்த பிறகு மீந்த உணவை அருந்தும் இல்லறதோருக்கு  அவர்கள் அறியாமலேயே செய்த ஐந்து பாவங்கள் முற்றும் அழிந்துவிடுகின்றன.

1. குற்றுதல் அல்லது இடித்தல், 2. அடுப்பெரித்தல் , 3, மாவு அரைத்தல், 4. குடங்களையும் பாத்திரங்களையும் தேய்த்து கழுவுதல், 5. பெருக்குதல் / மெழுகுதல் ஆகிய ஐந்து செயல்களும் ஐந்து பாவங்கள் (பஞ்சசூனா ) என்பதை மக்கள் பிரசித்தியாக அறிவர்.

உரலில் தானியத்தை இட்டு, உலக்கையால் குற்றி, உமியும் தவிடும் நீக்கிச் சுத்தம் செய்யும் பொது நாம் அறியாமலேயே பல நுண்ணிய ஜந்துகள் இறந்து போகின்றன.

ஆனால், அவ்வாறு செய்யாவிடின் தானியம் வேகாது. ஆகவே, ஐந்து கிருஹச்த பாவங்களில் 'குற்றுதல்' (கண்டணீ ) முதற்பாவம் ஆகிறது .

சமையல் செய்வதற்காக அடுப்பெரிக்க விறகை உபயோக்கிகிறோம். அடுப்பு எரியும்போதும் விறகைத் தூண்டிவிடும் போதும் நாம் விரும்பாமலும் நமக்குத் தெரியாமலும் சில உயிரினங்கள் இறந்து போகின்றன. இல்லறத்தோரின்  ஐந்து பாவங்களில் 'அடுப்பெரித்தல்' (சுள்ளி) இரண்டாவதாகிறது.

எந்திரத்தில் தானியங்கள் மாவாக அரைக்கப்படும்போது  சில நுண்ணிய உயிரினங்களும் அரைபட்டு இறந்துபோகின்றன. 'அரைப்பது' ஐந்து பாவங்களில் மூன்றாவது.

ஒரு குடம் தண்ணீர் கினற்றிலிருந்தொ  குளத்திலிருந்தோ எடுக்கப்படும்போதும், ஆண்களும் பெண்களும் துணி துவைத்துச் சலவை செய்யும்போதும், பல நுண்ணியிர்கள் இறந்து போகின்றன.

குடங்களையும் சமையல் செய்த பாத்திரங்களையும், சாம்பலையும் மண்ணையும் உபயோகித்துத்  தேய்த்துச் சுத்தம் செய்யும்போதும் பல ஜந்துகள் நாம் இச்சிக்காமலேயே  இறந்து போகின்றன. இவ்விதமாக, 'குடங்களைத் தேய்த்துக் கழுவுதல்' இல்லறத்தோர் செய்யும் நான்காவது பாவம் ஆகிறது.


No comments:

Post a Comment