கலியாணம நடந்து முடிந்ததும், கோஷ்டி ஷிர்டியிலிருந்து தூப்கேடா திரும்பியது. பாபா மட்டும் ஷிர்டியிலேயே தங்கிவிட்டார். ஷிர்டிக்குப் பொற்காலம் பிறந்தது.
அழிவற்றவரும் புராதனவருமான சாய் ஹிந்துவு மல்லர் , முஸ்லீமும் அல்லர். அவருக்கு ஜாதியில்லை, வம்சமில்லை, குலமுமில்லை,
கோத்திரமும் இல்லை. ஆத்ம ஞானமே அவருடைய உண்மையான அடையாளம்.
சாய் சாயீ என்று மக்கள் அவரை அழைத்தனர். அது அவருடைய பெயரா என்ன?இல்லவே இல்லை. மரியாதை நிமித்தமாக அவர் " சாயீயே வருக " என்று அழைக்கப்பட்டார். அப்படிதான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது .
கலியாணக் கோஷ்டியுடன் கண்டோபா கோயிலுக்கு அருகிலிருந்த
மகால்சாபதியின் களத்திற்கு அருகில் பாபா வந்த அன்றுதான் இது நடந்தது.
ஆரம்ப காலத்தில் அந்தக் களம் மகால்சாபதிதிக்கு சொந்தமாக இருந்தது. பிற்காலத்தில் அமீன்பாயிக்குச் சொந்தமாயிற்று. கலியாணக் கோஷ்டி வந்தபோது அவ்விடத்தில்தான் ஆலமரத்தடியில்
வந்து இறங்கியது.
கண்டோபா கோயிலினுடைய வளாகத்தில் மாடுகள் வண்டியிலிருந்து
பூட்டவிழ்த்து விடப்பட்டன. பாபாவும் கலியாணக் கோஷ்டியில் இருந்த
அனைவருடனும் அங்கு இறங்கினார்.
இவ்விளம் பக்கிரி வண்டியிலிருந்து இறங்கியபோது மகால்சாபதிதான்
அவரை முதலில் கண்டு, "சாயீயே வருக " என்று வரவேற்றார்.
அதன்பிறகு மக்கள் அவரை சாய் சாய் என்று அழைத்தனர். அப் பெயரே நிலைத்துவிட்டது.
அவர் மகால்சாப்தியின் முற்றத்தில் சிறிது நேரம் சில்லிம் புகைத்தார். பிறகு அங்கிருந்து, தங்குவதற்காக மசூதிக்குச் சென்றார்.
தேவி தாசரின் சஹாவாசத்தில் மகிழ்ந்து, ஷீரடியில் ஆனந்தமாக வாழ்ந்தார்.
சில சமயம் சாவடியில் உட்கார்ந்திருப்பார். சில சமயங்களில் தேவி தாசருடைய சங்கத்தில் இருப்பார். சில நேரங்களில் மாருதி கோயிலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். எங்கு விருப்பமோ, அங்கு சந்தோஷமாக காலம் கழித்தார்.
பாபா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, தேவி தாசர் ஷீரடியில் இருந்தார். பிறகு, மகானுபவி பிரிவை சேர்ந்த ஜானகிதாஸ் கொசாவியும் ஷீரடிக்கு
வந்து சேர்த்தார்.
இந்த ஜானகிதாசரோடு மகாராஜ் (பாபா) பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அல்லது,
பாபா எங்கிருக்கிறாரோ அங்கு பொய் ஜானகி தாசர் உட்கார்ந்திருப்பார்.
இருவருமே பரஸ்பரம் (ஒருவரை ஒருவர்) நேசித்தனர். அடிக்கடி சந்தித்தனர். இவர்களுடைய நட்பும்
நல்லுரவ்ரும் கிராம மக்கள் எல்லோருக்குமே சந்தோஷத்தை அளித்தன.
No comments:
Post a Comment