valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday, 13 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சாடே ஏழு நாள்களில் குரு சரித்திரத்தை ஒரே ஒருமுறைதான் படித்தார். கடந்த நாற்பது வருடங்களாக படித்துக் கொண்டிருக்கும் எனக்குப் பலனேதும் இல்லையா?-

"ஒருவர் ஏழு நாள்களிலேயே பலனை அனுபவிக்கிறார். மற்றவர் (ஆசிரியர்) ஏழு வருஷங்களாக பலனேதுமில்லாமல் இருக்கிறார். இக் கருணை மேகம் எப்பொழுது அருள்மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சாதகப் பறவையைப் போல நான் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். -

"ஞானிகளுள் மணிமாகுடமானவர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள் என்றைக்கு வரும்? என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா?"

பக்தவத்சலரான சாயி என்ன அற்புதம் செய்தார் என்று பாருங்கள்! என்னுடைய மனதில் இவ்வெண்ணம் எழுந்த உடனேயே அவருக்கு தெரிந்து விட்டது.

இம்மாதிரியான (என்னுடையது போன்ற) அஞ்ஞானத்தினால், கோடிக்கணக்கான நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் பக்தர்களின் மனதில் எழுகின்றன. பாபாவுக்கு இவை அனைத்தும் தெரியும்.

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லாருக்கும் நிச்சயமாக தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்; மகாராஜருக்கு உடனே தெரிந்துவிடும்!

ஆயினும் பரமகிருபையுள்ள அன்னை (சாயி), நிந்தனையான எண்ணங்களை மன்னித்து ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையான நல்லெண்ணங்களுக்கு, நல்வாய்ப்பு வரும்போது ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறார்.

ஆகவே, என்னுடைய எண்ணத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா என்னிடம் கூறினார், "எழுந்திரும், போய் அந்த சாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வாரும்.-

"அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பரஸ்பரம் சம்பாஷனை செய்துவிட்டு அவர் கொடுக்கும் தக்ஷினையை வாங்கிகொண்டு திரும்பி வாரும்."

சாயிநாதர் எனக்கு அருள் செய்யக் கருணை கொண்டதால், தக்ஷிணை என்னும் சாக்கில், "உடனே சென்று, என் சார்பாக சாமாவிடம் பணம் கேளும்" என்று கூறினார்.

 இவ்விதமான ஆக்ஞை பிறந்த பிறகு, எவருக்கு அவர் முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கும் திமிர் இருக்கும்? அது கீழ்ப்படியாத செயலாகிவிடும் அன்றோ! ஆகவே, அனுமதி பெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.

நான் உடனே கிளம்பினேன். சாமாவும் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

ஸ்நானம் செய்தவுடன் சுத்தமான மடிவேட்டியை அணிந்து கொண்டு நாமஜபம் செய்துகொண்டே கச்சத்தை சரிசெய்து கொண்டிருந்தார்.

அவர் வினவினார், "என்ன, இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்? மசூதியில் இருந்து வருகிறீர் போல் தெரிகிறதே! ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம்? இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர்?-


Thursday, 7 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பாபா ஒரு புராணி கரைபோலப் (ஆன்மீக சொற்பொழிவாளரைப் போலப்) புத்தகத்தை படித்து விளக்கம் கூறினார். சாடே ஒரு கதைகேட்பவரைப் போல அமைதியாகவும் மரியாதையுடனும் குருகதையைக் கேட்டார். (கனவுக் காட்சி).

'அட இதென்ன தலைகீழான ஆள்மாறாட்டம்?" என்று சாடே  நினைத்தார். மிக ஆச்சரியமடைந்து அவருக்குப் பிரேமையால் தொண்டை அடைத்தது.

"அஞ்ஞான மென்னும் தலையணையின்மேல்  தலையை வைத்துகொண்டு புலனின்பங்களின் மேல் சாய்ந்து கொண்டு குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடு தயாள ரே!-

"இதே நிலையில் இருந்த என்னை ஒரு தட்டுத் தட்டி எழுப்பி, குருசரித்திரம்  என்னும் அமுதத்தை ஊட்டினீர்; கிருபாநிதியே!"

இந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தபோதே சாடே தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார். தாம் கனவில் கண்ட காட்சியை விவரமாகக் காகா  சாகேப் தீக்ஷிதரிடம் சொன்னார்.

மேலும் அவர் கூறினார், "காகா, இக் காட்சியினுடைய அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பாபாவுக்குதான்  அந்த சாமர்த்தியம் உண்டு. அவருடைய மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.-

"நான் ஏற்கெனவே ஒரு சுற்று படித்தது  போதுமா; அல்லது இன்னுமொரு சுற்று ஆரம்பித்துப் படிக்க வேண்டுமா? நான் என்ன செய்யவேண்டுமென்று  பாபா விரும்பிகிறார் என்று கேளுங்கள். அப்பொழுதுதான் என் மனம் அமைதியடையும். "

நல்ல வாய்ப்பு  ஒன்றை பயன்படுத்திக்கொண்டு, தீக்ஷிதர்  பாபாவுக்கு சாடேயின் கனவை விவரித்தார். "பாபா, இந்தக் கனவின் மூலம் சாடேவுக்கு  என்ன சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்?-

"இன்னுமொருமுறை சப்தாஹம் படிக்க வேண்டுமா அல்லது படித்தது போதுமென்று நிறுத்திவிடலாமா? இக் கனவுக்காட்சியின் முக்கியத்துவம் என்னெவென்று நீங்களே விவரித்து அவருக்கு பாதையை தெளிவாகக் காட்டுங்கள்!-

"இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். சாடே  ஒரு கபடமற்ற, நேர்மையான அடியவர். அவர்மீது கிருபை கூர்ந்து அவருடைய விருப்பதை நிறைவேற்றுங்கள்."

பாபா திருவாய் மலர்ந்து ஆணையிட்டார், "இன்னும் ஒரு ஆவிருத்தி (சுற்று) படிக்கப்படட்டும். குருவினுடைய இந்தப் புனிதமான சரித்திரத்தை படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக ஆகிவிடுகின்றனர்.-

"இந்தப் போதியைப் (பாராயண  நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களம் உண்டாகும்; இறைவன் பிரீதியடைவான்; உலக பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்."

பாபா இதைத் திருவாய் மொழிந்து கொண்டிருந்தபோது நான் அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் எனக்குள்ளே வியப்படைந்தேன். என்னுடைய மனதுள் ஓர் எண்ணம் எழுந்தது.

"பாபா என்ன இவ்வாறு செய்கிறார்! சாடேவின்  சிறிய முயற்சி ஏழு நாள்களிலேயே பலன் அளித்து விட்டது; நானோ வருஷக் கணக்காகக் கழித்துவிட்டேன்!-  


Thursday, 31 March 2016

ஷிர்டி சாயி சத் சரிதம்

அந்த பக்தரின் வரலாறும் அவ்வாறே; வாழ்க்கையில் அவர் அடைந்த தளர்ச்சியைக் கண்ட சில நண்பர்கள், அவருக்கு இதமானதொரு பரிந்துரை வழங்கினார். அதைக் கேளுங்கள்.

"ஷீரடிக்கு சென்று சமர்த்த சாயியை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயாசாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

"ஞானிகளுடைய சந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனதைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது. -

"பல தேசங்களில் இருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். சாயியின் பாத தூளியில் புரளுகின்றனர். மகாராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப் படிகின்றனர். அவருக்கு சேவை செய்து, விரும்பியவற்றை பெறுகின்றனர். -

"இதுவே அவருடைய பிரசித்தியான கீர்த்தி, குழந்தைகளில் இருந்து கிழவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணை வைத்தால் உம்முடைய துக்கம் நிவிர்த்தியாகிவிடும். -

"இக் காலத்தில் ஷிர்டி ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவு பகலாக யாத்ரிகர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்."

வறட்சியால் ஆட்பட்ட தரித்திரனுக்கு திடீரென்று பெய்யும் கனமழை எப்படியோ, பசியால் வாடிப் பிராணன் போய்விடும் போன்ற நிலையில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பது எப்படியோ-

அவ்வாறு இருந்தது நண்பர்களின் வார்த்தை அந்த பக்தருக்கு. அவர் அந்த அனுபவத்தை பெறவேண்டுமென்று முடிவுசெய்து, ஷிர்டி செல்லும் பாதையில் பயணமாகக் கிளம்பிவிட்டார்.

ஷிர்டி கிரமாத்திற்கு வந்து சேர்ந்தார்; பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே அவருடைய கண்களில் அமைதி தவழ்ந்தது; மனதில் சமாதானம் நிரம்பியது.

பூரணமானதும் சனாதனமானதும் மாசற்றதும் சுய ஜோதியுமான சாயியின் உருவத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

பூர்வ ஜன்மத்தில் சம்பாதித்த பாக்கியத்தாலேயே தாம் சாயியை தரிசனம் நேர்ந்து, சாந்தியையும் கலக்கம் இல்லாத மனதையும் பெற்றதாக நினைத்தார்.

இந்த பக்தருடைய குடும்ப பெயர் ஸாடே. மனத்திண்மை மிக்க இவர், நியம நிஷ்டையுடன் குரு சரித்திர பாராயணத்தை ஆரம்பித்தார்.

சப்தாஹம் (ஒரு வாரத்திற்குள் பாராயணம் செய்து ஒரு சுற்று முடித்தல்) முடிந்த அன்று இரவே, பாபா சாடேவின் கனவில் தோன்றி, புத்தகமும் கையுமாக அவருக்கு அர்த்தத்தை விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

பாபா அமைதியாக தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு சாடேவை தமக்கெதிரில் உட்கார வைத்து, குருசரித்திரம் புத்தகத்தை கையில் வைத்துகொண்டு பிரவசனம் செய்வதற்குத் தயாராக இருந்தார்.


Thursday, 24 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்  சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.

உலக வாழ்கையின் வழிகாட்டி குரு, க்ஷேத்திராதனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்து கொள்வதற்கும் பற்றற்றருப்பதற்கும் குருவே வழிக் காட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜ ரூபத்தைக் காணும்படி செய்கிறார். மகா காருண்ய மூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் அழிவடைந்து, சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப் பற்றி பேசுகிறான்! குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்து சேர்கின்றன.

ஞானிகள் அடியவர்களுக்கு கற்பகதரு ஆவர். அவர்களுடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு சேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவை இல்லாது செய்துவிடுவர்.

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.

பிரபு ரே என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபாலிடி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்ட்  என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரசித்தியாகவும் கீர்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.

இக் கனவான் வியாபாரத்தில் பெரு நஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்று விதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தும் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.

மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தை தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத் தீவிரத்துடன் பக்தி செய்து இறைவனை கூவி அழைக்கின்றான்.

கெடுசெயல்களை தங்கு தடையின்றி தொடரும் வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும், முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன் அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.  


Thursday, 17 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக அதிகாரத்திற்கு ஏற்றவாறு, எள்ளளவும் புத்தி பெதளிக்காத வகையில், பாபா ஒவ்வொரு பக்தருக்கும்  அவருக்கேற்ற உபதேசத்தை அளித்து ஆன்மீகப் பாதையில் நடைபோட வைக்கிறார்.

குரு தங்களுக்கு என்ன திருவாய் மொழி  அருளினார் என்பஹை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அவ்வாறு செய்தால் குருவின் திருவாய்மொழி பயனற்றுப் போகும் என்றும் நம்புகின்றனர்.

இது ஏறும் கற்பனையே. ஒன்றுமில்லாதததைப் பெரிதுபடுத்தும் சமாசாரம்; ஆகவே, அர்த்தமற்றது. உண்மையில், நேரடியாகச் செய்யப்பட்ட ஆன்மீக போதனைகளை மட்டுமல்லாமல் கனவில் தோன்றிய போதனைகளையும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது பயன்தரக்கூடிய , நல்ல ஞானம்.

இவ்வப்பிராயத்திற்கு பிரமாணம் ஏதும் இல்லை என்று நினைப்பவர்கள், புத்த கௌசிக ரிஷியே இதற்குப் பிரமாணம் என்பதை அறியவும். தமக்குக் கனவில் அளிக்கப்பட்ட உபதேசத்தை 'ஸ்ரீ ராம ரக்ஷா தோத்திரம்' என்னும் உருவத்தில் அனைவருக்கும் அளித்துவிட்டார் அவர்.

குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்த மழை பொழியும் கனத்த மழைக் காலத்து மேகமாவார். இவ்வானந்தம் மறைத்தோ பதுக்கியோ வைக்கவேண்டிய பொருளா என்ன? இல்லவே இல்லை! இதயம் நிரம்புவரை அனுபவித்துக் கொண்டே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.

ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாக தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியதிற்காகவே, இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.

அவருடைய பதை மர்மமானதோ இரஹசியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுடைய மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்தி செய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

சத்குருவின் சந்தகம் புனிதமானது! அதனுடைய மகத்துவத்தை எவரால் தேவையான அளவிற்கு விவரிக்க முடியும்? அவருடைய திருவாய் மொழி ஒவ்வொன்றாக சேகரிக்கபடும்போது, மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்கிற உற்சாகம் கரைபுரள்கிறது.

ஈசுவரனை பிரேமையுடன் வழிபடுவதாலும், குருவிற்கு சேவைசெய்துpooai செய்வதாலும், குருவால் அளிக்கமுடிந்த ஞானத்தை பெற்றுக்கொள்ளலாம். இது விஷயத்தில் வேறெந்த முயற்சியும் வியர்த்தமே.

விஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது) ஆவரணமும் (மெய்யைத் திரை போட்டு மறைத்தல்) வாழ்க்கைப் பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆகிவிடுகின்றன. குருவின் திருவாய் மொழியே வாழ்க்கைப்பாதையில் தடங்கல் இல்லாமல் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.

குரு பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். 


Thursday, 10 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

எனக்கு அனுக்ரஹம் (பகுதி 1)

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

பரம நித்தியமான சத்குருவே ஜய ஜய! பிரம்ம சத்தியமான சத்குருவே ஜய ஜய! இவ்வுலகின் பொய் தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜய!

ஆதியும் அந்தமும் இல்லாவதரே ஜய ஜய! இரட்டையராகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜய! நிர்விகாரராகிய  (மாற்றமே இல்லாதவராகிய ) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.

உப்பால் செய்யப்பட்ட பொம்மை சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பி வர இயலுமா? இது எக்காலத்துக்கும் நடக்காது; நீங்களும் அவ்வாறே! (பக்தன் உப்புப் பொம்மை; பாபா சமுத்திரம்)

வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) எதுமில்லாமேலேயே விரலால் சுட்டிக்காடுகிறீர்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவர்க்கு 'என்னுடையது' என்பதும் 'மற்றொருவருடையது' என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.

கடந்த அத்தியாயத்தில் தூய்மை அளிக்கும் ஒரு சிறுகதையின் மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கி விட்டு விட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

செவி மடுப்பவர்களே! பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அனுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.

இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனதுடன் கேட்க வேண்டும்.

கேட்பவர்கள் சுவாரசியமாக கேட்டால் கதை சொல்பவர்க்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது. 


Thursday, 3 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஹேமாத் சாயி பாதங்களில் சரணடைகிறேன். நகைச்சுவையாலும் கேலி செய்தும் ஞானத்தை அழிப்பது, பக்தர்களைக் கைதூகிவிட்டு மங்களம் அளிக்கும் வழிகளில் ஒன்று. 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுகொண்டு  வந்தவர் ஒரு நொண்டிசாக்குத்தான்!

அடுத்த அத்தியாயம் மேலும் இனிமையானது! செவிமடுப்பவர்கள் திருப்தி அடைவார்கள். என்னுடைய இதயத்தின் ரஹசிய தாபம் நிறைவேறும்.

நான் எவ்வாறு பாபாவின் செய்தியை எடுத்துக்கொண்டு மாதவராவ் இடம் (சாமா) சென்றேன் என்பது பற்றியும் அதன் பிறகு எவ்வாறு பாபாவின் அனுக்கிரஹதைப் பெற்றேன் என்பந்து பற்றியுமான விவரங்களைச் செல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வு ஊட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும் பதினேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்!