ஷிர்டி சாயி சத்சரிதம்
சஹாயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நானே காட்டையையும் கூட சுலபமாகத் தாண்டிவிடலாம். கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரே காட்டைக் (வீட்டின் தலைவாயிலை) கடப்பது மிகக் கடினம்.
ஷீரடியில் செய்வதாக வேண்டிகொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர தேநீரை கூட சர்க்கரையின்றியே அருந்தினார்.
சிலகாலம் இவ்வாறு கழிந்தபிறகு, சோல்கர் ஷிர்டி செல்லும் நாளும் வந்தது. அவர ஷிர்டி சென்று நேர்த்திகடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.
பாதங்களில் நமஸ்காரம் செய்து சாயி தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.
நிர்மலமான மனதுடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை சமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், "இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. "
சாயி தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது. சம்பாஷனை செய்தது இதயத்தைக் குளிர வைத்தது. அவர் ஜோக் என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.
ஜோக் கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும் (சோல்கரும் ) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்கிடம் கூறினார், "இவருக்கு சர்க்கரை பூரிதமாக போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்கு கொடுங்கள்".
தம்முடைய ரகசியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்த பாஷ்பம் (கண்ணீர்) பொங்க, சாயியின் சரணங்களில் தலையை வைத்தார்.
ஜோக் இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார். சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்கு ஆக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்து கொண்டார்.
பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப் பற்றி நினைக்க வேண்டும்? சொல்கரின் விசுவாத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.
தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், "சோல்கர்! நீர் நேர்த்திகடன் ஏற்றுகொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது!-
"நேர்த்திக்கடன் எடுத்துக் கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுகொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.-
சஹாயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நானே காட்டையையும் கூட சுலபமாகத் தாண்டிவிடலாம். கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரே காட்டைக் (வீட்டின் தலைவாயிலை) கடப்பது மிகக் கடினம்.
ஷீரடியில் செய்வதாக வேண்டிகொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர தேநீரை கூட சர்க்கரையின்றியே அருந்தினார்.
சிலகாலம் இவ்வாறு கழிந்தபிறகு, சோல்கர் ஷிர்டி செல்லும் நாளும் வந்தது. அவர ஷிர்டி சென்று நேர்த்திகடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.
பாதங்களில் நமஸ்காரம் செய்து சாயி தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.
நிர்மலமான மனதுடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை சமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், "இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. "
சாயி தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது. சம்பாஷனை செய்தது இதயத்தைக் குளிர வைத்தது. அவர் ஜோக் என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.
ஜோக் கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும் (சோல்கரும் ) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்கிடம் கூறினார், "இவருக்கு சர்க்கரை பூரிதமாக போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்கு கொடுங்கள்".
தம்முடைய ரகசியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்த பாஷ்பம் (கண்ணீர்) பொங்க, சாயியின் சரணங்களில் தலையை வைத்தார்.
ஜோக் இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார். சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்கு ஆக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்து கொண்டார்.
பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப் பற்றி நினைக்க வேண்டும்? சொல்கரின் விசுவாத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.
தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், "சோல்கர்! நீர் நேர்த்திகடன் ஏற்றுகொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது!-
"நேர்த்திக்கடன் எடுத்துக் கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுகொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.-
No comments:
Post a Comment