ஷிர்டி சாயி சத்சரிதம்
பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக் கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன? பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.
அழுக்கு நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்ல முடியுமா? அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச் செல்வம் என்று சொல்ல முடியுமா?
சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் சாயியின் மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்லிகொண்டார், "ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின் மீது தயை காட்டுங்கள்."
சோல்கர் தாற்காலிகமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தை சுமக்க முடியாது தவித்து வந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பை பெறுகின்ற முழுபாரத்தையும் பாபாவின் மீது போட்டுவிட்டார்.
தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுதிருப்தி அடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக் கடன் ஏற்றுக் கொள்வர்.
பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக் கடன் எற்றுகொள்வர் .
பணவசதியில்லாத சோல்கர், சாயி பாதங்களை மனதில் இருத்தி எளிமையுடன் இவ்வாறு வேண்டிகொண்டார்.
"பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாக வேண்டும். -
"பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீட்சையில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்காலிக வேலையையும் இழக்க நேரிடும்.-
"உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (ஷீரடிக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்லிக் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தனமான தீர்மானம்."
இதுதான் சோல்கர் ஏற்றுகொண்ட நேர்த்திகடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது.. ஆனால், அவருடைய நேர்த்திகடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதை விட்டுவிட்டார்.
பயணம் செய்வதற்கு பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும்? ஆகவே, ஆரா துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று ஷிர்டிப் பயணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே போனார்.
பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக் கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன? பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.
அழுக்கு நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்ல முடியுமா? அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச் செல்வம் என்று சொல்ல முடியுமா?
சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் சாயியின் மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்லிகொண்டார், "ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின் மீது தயை காட்டுங்கள்."
சோல்கர் தாற்காலிகமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தை சுமக்க முடியாது தவித்து வந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பை பெறுகின்ற முழுபாரத்தையும் பாபாவின் மீது போட்டுவிட்டார்.
தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுதிருப்தி அடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக் கடன் ஏற்றுக் கொள்வர்.
பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக் கடன் எற்றுகொள்வர் .
பணவசதியில்லாத சோல்கர், சாயி பாதங்களை மனதில் இருத்தி எளிமையுடன் இவ்வாறு வேண்டிகொண்டார்.
"பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாக வேண்டும். -
"பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீட்சையில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்காலிக வேலையையும் இழக்க நேரிடும்.-
"உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (ஷீரடிக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்லிக் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தனமான தீர்மானம்."
இதுதான் சோல்கர் ஏற்றுகொண்ட நேர்த்திகடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது.. ஆனால், அவருடைய நேர்த்திகடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதை விட்டுவிட்டார்.
பயணம் செய்வதற்கு பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும்? ஆகவே, ஆரா துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று ஷிர்டிப் பயணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே போனார்.
No comments:
Post a Comment