ஷிர்டி சாயி சத்சரிதம்
ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விடும்பியும் மற்றவற்றின் மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோத பாவமின்றி சமமாகவே பார்த்தார்.
சத்ருபாவமும் இல்லை; மித்திர பாவமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் சமமாகவே நடத்தினார். மகானுபாவரான சாயி இவ்விதமாகவே இருந்தார். அவருடைய பிர்பாவதைக் கேளுங்கள்.
ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப் பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணிய கோடியிலிருந்து தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களை காப்பாற்ற விரையும் பொது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
ஆன்மிகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞாநிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானி களை விட்டு விடுவோம்.
அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலே எரிந்து போகிறார்கள்.
ஒரு ஞானி கருணையால் உந்தப் பட்டு 'விசுவாசம் துளிர் விடட்டும்" என்ற நோக்கத்தில் அஞ்ஞானி களையும் அரவணைப்பார். ஆனால், ஞான கர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான்.
பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவு படுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா.
நமக்கு வர்ண விபாகங்களை பற்றிய போராட்டம் வேண்டா; அதைப் பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிரமத்தை உடும்புபோல் பிடித்துக் கொள்ள வேண்டா; வேதங்களையே எதிர்க்கும் மெத்தப் பண்டிதத் தனமும் வேண்டா.
வேதங்களையும் வேதாந்தகளையும் கரைத்து குடித்த பண்டிதர்கல்தாம், ஞான கர்வத்தால் மதோன்மதர்களாக ஆகி பக்தி மார்கத்துக்கு தடையாக செயல் படுகின்றனர். அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை.
அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப் பயத்தை வெல்கிறார். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தாலும் தீர்த்து வைக்க முடியாது.
ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்து விட்டு அஹன்று விடும். ஞான மார்க்க அபிமானிகளின் விகற்பம் (மனக் கோணல்) என்றுமே அழியாது.
இப்பொழுது தெய்வ பலத்தால் நிகழ்ந்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியை சொல்கிறேன், கேளுங்கள்! ஒரு சடங்குச் செல்வருக்கு சாயியுடன் பேட்டி என்னும் எளிதில் கிடைக்காத பாக்கியம் கிடைக்க வேண்டுமென்று நெற்றியில் எழுதப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment