valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 January 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பால்கே மனமுடைந்து போனார். "மசூதியின் படிகளிர்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னே! நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையே! -

"எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடைச் செய்து அவரருளைப் பெற முடியும்?" இவ்வெண்ணமே பாலகேயின் மனதை இரவும் பகலும் ஒரு வியாதியைப் போல் வாடியது. 

ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், "சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும். - 

"நந்திதேவரை முதலில் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?" பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது. 

மேல் எழுந்த வாரியாகப் பார்க்கும்போது , கதை கேட்பவர்களுக்கு இது மிகைப் படுத்திச் சொல்லப்பட்ட கூற்றாக தெரியலாம். ஆனால், ஷீரடிக்கு பாபா தரிசனத்திற்காக சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது. 

பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரம் எதுவும் இல்லாமலும் பேச நினைத்தவர்கள், மாதவராவையே முதலில் அழைத்துக்கொண்டு  சென்றனர். 

மாதவராவ் முதலில் மெல்லிய குரலிலும் இனிமையாகவும் யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பது பற்றி இதமாக அறிமுகப் படுத்துவார். சமர்த்த சாயி இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார். 

இதைப் பற்றி கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, "என்னுடைய மனத்திலிருந்து இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கெஞ்சினார். 

தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார். 

மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தை பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். "பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப் படுகிறாரே! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா! அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக் கூடாதா?" என்று கேட்டார். 

"அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்று வந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக ஷீரடிக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது?   ஒ, அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள் !-

"எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆனா உடனே திரும்பி விடுகிறார்கள். இவரை மாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப் போகச் செய்ய வேண்டும்?-

"இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனதுள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்று விடுவார்".



No comments:

Post a Comment