ஷிர்டி சாயி சத் சரிதம்
துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும். மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும்.
சத்குரு சாயிநாதரைத் தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கதினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விளக்க முடியும்?
கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, சாயியின் திருவாய் மொழிகளை சிரத்தையுடன் பத்திரப் paduthungal. பக்தர்களே! இது துர்ச்சங்கதால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும்.
சிருஷ்டி செய்யப் பட்ட இவ்வுலகத்தை கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப் பட்டு ரமித்துப் போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் சத்சங்கத்தில் ஈடுபடுகிறது.
நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு சத்சங்கம் மகிமையுடயது. வேறு எந்த மார்க்கத்திற்கும் சத்சங்கதைப் போல ஆதனை புரியும் திறமை கிடையாது.
ஞானிகளின் சங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற சங்கங்கள் அனைத்துமே குறையுடவை. சத்சங்கமே மருவில்லாதது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது.
சத்சங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் சஹஜமாக வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும் . மனம் சத்சங்கத்தில் மூழ்கி விடும்.
உலக விஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். சத் சங்க நாட்ட மெனும் பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்' என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது; ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான். துக்கத்திற்கு கடுமுகம் காட்டுகிறான்.
வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும்; ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும்.
சத் சங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. சத் சங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். சத் சங்கம் உலக பந்தங்களை பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது.
உத்தமமான கதியை அடைவதற்கு சத்சங்கமே புனிதத்தை அளிக்கக் கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது.
No comments:
Post a Comment