ஷிர்டி சாயி சத் சரிதம்
இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம் அம் மனோ நிலை சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதா என்ன?
புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக் கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோலியைத் தோளில் மாட்டிக் கொண்டு வீடுவீடாகச் சென்றார்
யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, " ஓ, மகளே! எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி
ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.
பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால் கொட்டப் பட்டன ஓ, என்ன வினோதமான உணவு சேர்க்கும் முறை!
சாதத்தையோ, சோள ரொட்டியையொ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார். ஆனால் திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர் டப்பாவில் கொட்டப் பட்டது .
வித விதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது மனதிலிருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?
ஜோலியில் யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவை உள்ளதாயினும் சரி, சுவை அற்றதாயினும் சரி, அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்!
ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததை கொண்டு வயிற்றை நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.
பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப் பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்! சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்!
இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப் பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.
மசூதியையும் வெளி முற்றதையையும் தினமும் பெருக்கும் பெண்மணி, பத்து - பன்னிரண்டு சோள ரொட்டிகளை எடுத்துக் கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக் கொண்டு போனதை ஒருவரும் தடை செய்யவில்லை.
இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம் அம் மனோ நிலை சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதா என்ன?
புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக் கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோலியைத் தோளில் மாட்டிக் கொண்டு வீடுவீடாகச் சென்றார்
யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, " ஓ, மகளே! எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி
ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.
பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால் கொட்டப் பட்டன ஓ, என்ன வினோதமான உணவு சேர்க்கும் முறை!
சாதத்தையோ, சோள ரொட்டியையொ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார். ஆனால் திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர் டப்பாவில் கொட்டப் பட்டது .
வித விதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது மனதிலிருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?
ஜோலியில் யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவை உள்ளதாயினும் சரி, சுவை அற்றதாயினும் சரி, அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்!
ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததை கொண்டு வயிற்றை நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.
பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப் பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்! சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்!
இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப் பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.
மசூதியையும் வெளி முற்றதையையும் தினமும் பெருக்கும் பெண்மணி, பத்து - பன்னிரண்டு சோள ரொட்டிகளை எடுத்துக் கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக் கொண்டு போனதை ஒருவரும் தடை செய்யவில்லை.
No comments:
Post a Comment