valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 August 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராம நவமி உற்சவம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிஷதிற்காகவோ எதற்காகவோ இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டி யாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கறை சேர்க்கிறார்.

சத்குரு என்ற வார்த்தை உள்ளதைக் கிள்ளும்போதே சாய் மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே என்முன் தோன்றித் தம்முடைய வரம் நல்கும் கரத்தை என் இதயத்தின் மீது வைக்கிறார்.

அவருடைய வரம் தரும் கரம், துனியிலிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.

குருவினுடைய ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்) பிரளயகாலத்து அக்கிநியாலும் அழிக்க முடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புத சக்தி வாய்ந்தது. கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது.

கடவுளைப் பற்றியோ புராணங்களைப் பற்றியோ தப்பித் தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருவபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாச்திகர்களுக்குங்கூட, அது (குருவினுடைய கரம் தீண்டல்) சாந்தியை அளிக்கும்.

தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பல ஜென்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. சாயியின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மை அடைகின்றனர்.

அவருடைய சுந்தரமான உருவத்தின் மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபாவம்  எழுகிறது. 


No comments:

Post a Comment