ஷிர்டி சாயி சத்சரிதம்
நடக்கவே முடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக, அவர் முகம் பிரசன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை.
இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக் கொண்டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார்.
"நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும் போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன?
"நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவலின்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டறத்தின்மேல் ஏகப் பிரியம்? இதென்ன விசித்திரமான நடத்தை! நடத்தை ஒரே சீராக இல்லையே!"
பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளை பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள்.
"தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப் படுத்திகொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார்.
"நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும்' என்ற சந்தேகம் அவருக்கு தோன்றவே இல்லை.
"எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படிதான் அவர் என்னை ஏமாற்றி விட்டார். நான் மறுப்பதற்கு இடங் கொடுக்காமலேயே அவர் எனை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார்.
தாதா இந்த விவரணத்தைக் கேட்டார். அனால், அதை ஒரு நகைச் சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவும் எடுத்துக் கொண்டார். வீடு திரும்புவரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை.
பாபாவினுடைய இந்த முன்னுக்குப் பின் முரணான செயல், தாதாவை மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியை பற்றி டாக்டர் பண்டித்திடம் பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு விளங்கியது.
தோபெச்வர் என்னும் ஊரை சேர்ந்த ரகுநாத் (1821-1910) ஒரு சித்தர். 'காகா புரானிக்' என்ற பெயரால் நன்கு அறியப் பட்டவர். பூர்வ ஜன்ம சம்பத்தால் டாக்டர் பண்டிதுக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகி விட்டார்.
பண்டித் தம் குரு காகாவை கூவி அழைத்தார். அதனால், ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பிரவாஹம் அன்றோ!
இருந்தபோதிலும் , பூஜை சடங்குகள் எல்லாம் பாபா விரும்பிய போதுதான் அனுமதிக்கப் பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரசிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களை விசிறி அடித்துவிடுவார்.
நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று ஓடிவிடுவர்.
No comments:
Post a Comment