Thursday, 6 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"அன்று மாலை பாபுசாஹெப் புட்டி மலங்கழிக்க கழிவறைக்குச் சென்றபோது ஒரு பாம்பு அந்த நேரத்தில் அங்கு புகுந்து கொண்டிருந்தது.

அந்த பயங்கரமான நிலமையைப் பார்த்துவிட்டு பாபுசாஹெப் உடனே வெளியே வந்துவிட்டார். பாபுசாஹிபின் சிப்பாய் லகானு பாம்பை ஒரு கல்லால் அடித்துக் கொன்றுவிடலாம் என்று நினைத்தார்.

ஆனால், அவர் ஒரு கல்லை எடுக்க முயன்றபோது பாபுசாஹெப் அவரைத் தடுத்து, "போய் ஒரு கழியைக் கொண்டு வா; அவரசப்பட்டால் காரியம் கெட்டுவிடும்" என்று சொன்னார்.

லகானு கழியைக் கொண்டுவர விரைந்தபோது, பாம்பு சுவரின் மீது ஏற ஆரம்பித்தது. நிலைதடுமாறிக் கீழே விழுந்து, குழியில் இருந்து 'சர சர' வென்று ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

பிறகு அவ்விடத்தில் இருந்து பாம்பு மறைந்துவிட்டது. அத்துடன் அதைக் கொல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. புட்டி சாஹிபுக்கு பாபா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. தமக்கும் பாம்புக்கும் இருவருக்குமே ஆபத்து வராமல் பாபா காப்பாற்றிய அற்புதத்தைக் கண்டு வியந்தார்.

சாயி தம் பக்தர்களுடன் பழகிய அற்புதக் காட்சியைத் தம் கண்களாலேயே நேரில் பார்த்த பாக்கியசாலிகள் என்றென்றும் அதை மறக்க முடியாது.

இம்மாரிதியான அனுபவங்கள் பலவற்றை அளித்து, பக்தர்களின் மனதை சாயி சுண்டி இழுத்தார். அவ்வனுபவங்களை எல்லாம் இங்கு எழுதக் காகிதம் போதாது; அவ் வர்ணனைகளுக்கு முடிவேயில்லை!

இப்பொழுது, சாவடியில் இரவு ஒரு மணியளவில் பாபாவின் எதிரிலேயே நடந்த அம்மாதிரியான நிகழ்ச்சியொன்றைக் கேளுங்கள்.

கோபர்காங்வ் தாலுகாவில் அமீர் சக்கர் என்பவருடைய வதனாக (ஜமீன் பரம்பரை போன்ற சொத்து) கொராலே என்ற கிராமம் இருந்தது. அமீர் சக்கருக்கு பாபாவிடம் ஆழ்ந்த பக்தி இருந்தது.

கசாப்புக்கு கடைகாரக் குடும்பத்தில் பிறந்த அவர் பாந்த்ராவில் பிரபலமான தரகராக இருந்தார். அவரை ஒரு கடுமையான வியாதி பீடித்து மோசமாக பலவீனப் படுத்திவிட்டது.

இன்னல்கள் நேரும்போது மனிதன் இறைவனை நினைக்கிறான். அவருடைய வியாபரா சம்பந்தமான வேலைகளையும் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அமீர் சக்கர் ஷிர்டிக்கு ஓடினார்.

பாண்டவர்களின் தாயார் குந்தி, வனவாசத்திலும் அக்ஞாத வாதத்திலும் (யாருக்கும் தெரியாது மறைந்து வாழ்தல்) எத்தனையோ இன்னல்களைத் தரும்படி ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டினார்!

குந்தி கேட்டார், "தேவா! பரமேச்வரா! எவர்கள் சுகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு சுகத்தைக் கொடு. ஆனால், எனக்கு மட்டும் நான் உன்னை மறவாதிருக்கும் வகையில் தொடர்ச்சியாக இன்னல்களையே கொடு.- 



No comments:

Post a Comment