Thursday, 5 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

கதையை விட்ட இடத்தில்  தொடர்வோம். பாபா ஒரு மரப்பலகையின் மீது உறங்கினார். அவர் ஏறியதையும் இறங்கியதையும் எவருமே கண்டதில்லை. அவருடைய வழிமுறைகள் புரிந்து கொள்ள முடியாதவை என்னும் உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. 

ஹிந்துவோ, முஸ்லீமோ அவருக்கு இருவரும் சரிசமானம். நாம் இதுவரை ஷீரடியின் தெய்வமாகிய பாபாவின் வாழ்க்கை முறைகளை மேலோட்டமாக பார்த்தோம். 

இப்பொழுது குருவைப் பற்றிய இனிமையான நிகழ்சிகளால் அலங்கரிக்கப் பட்ட பதினொன்றாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம். திடமான பக்தி பாவத்துடன் அதை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பணம் செய்வோம். 

இதைச் செய்வதால் நாம் பாபாவின் சகுன (குணங்களோடு கூடிய) உருவத்தை தியாநித்தவர்களாவோம். இது ருத்ர ஏகாதசினி  ஜபம் செய்வதற்கு சமானமாகும். இந்த அத்தியாயம் பஞ்ச பூதங்களின்மேல் பாபாவுக்கு இருந்த ஆதிபத்தியத்திற்கு நிரூபனமளிது, பாபாவினுடைய  மகிமையை வெளிப்படுத்துகிறது. 

இந்திரனும் அக்கினியும் வருணனும் பாபாவினுடைய  சொல்லுக்கு எவ்விதம் கட்டுப்பட்டனர் என்பதை எடுத்து இயம்புகிறேன். கதை கேட்பவர்களே! கவனத்தை என்னிடம் திருப்புங்கள். 

பூரண விரக்தியின் வடிவமான, குணங்களோடு கூடிய, சாயியின் அவதார ரூபமே வேறெவரையும் நாடாத விசுவாசமான பக்தர்களின் நிஜமான விச்ராந்தி. அன்புடனும் பாசத்துடனும் அவருடைய உருவத்தை மனக்கண்முன் நிறுத்துவோமாக!

குரு வாக்கியத்தின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை அவருக்கு ஆசனமாக அளிப்போம். எல்லா சங்கல்பங்களிலிருந்தும் துற வேற்கிறேன்  என்னும் சங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்!


No comments:

Post a Comment