Thursday, 10 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரசிக்கும்படி இருந்தது! 

உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும். 

சாயிபாபா விரும்பினால், ஷீரடியின் மகளிர் பாடிய எல்லாப் பாட்டுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் செய்ய முடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறும். 

உருவமில்லாத இறைவன் பக்தர்களின் மேல் கொண்ட கிருபையினால், சாயியுனைடைய உருவத்தில் ஷீரடியில் தோன்றினான். அவனை அறிந்து கொள்வதற்கு, முதலில், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டு விட வேண்டும். பக்தியாலும் பிரேமையாலும்தான் அவனை அறியமுடியும். 

ஷிர்டி மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்த காலத்தில்  பழுத்து, சாயி என்னும் மூளை விட்டிருக்கலாம். இது சில காலம் கழித்து ஷீரடிக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது. 

விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது; ஜன்மமில்லாதது ஜென்மத்தை ஏற்றுக் கொண்டது. உருவமில்லாதது உருவெடுத்தது. கருணையின் ரசம் மனித உருவெடுத்தது. 

புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கோடை - இந்த ஆறு மகோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. 

பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாமென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றா நிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக் கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக் கொண்டார். 

ஆஹா ! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய அலங்கரித்தன. 

வாக்கின் தேவதையாகிய சரஸ்வதியும் சொல்லத் துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலை குனியச் செய்தன. சாயி இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே  பேசினார். 

இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது. இருப்பினும் கடமை தவறக் கூடாது என்னும் காரணத்தால் சொல்லியே தீர வேண்டியிருக்கிறது.

பக்தர்களின்மீது கருணை கொண்ட சாயி, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார்; "அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறே; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். -

"உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்த்தினால்  நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி".


No comments:

Post a Comment