Thursday, 8 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

புராதனமான கோயில்களைப் புதுப்பிப்பதில் பாபா எவ்வளவு பிரீதியுடையவராக இருந்தார் என்ற முந்தய காதையின் தொடர்ச்சியை நினைவு கூர்வோம்.

பரோபகார ரீதியில் பாபா எவ்வாறு சிரமங்களை மேற்கொண்டார் என்பது பற்றியும், பக்தர்களுடைய துக்கங்களையும் உபாதிகளையும்  தம்முடலில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காகத் தம்முடலை வருத்திக் கொண்டு எவ்வாறு அவர்களைக் காத்தருளினார் என்பது பற்றியும்,

சமாதி நிலையில் எவ்வாறு கண்டயோகம், தோதி - போதி, இத்யாதி பிரயோகங்களை செய்தார் என்பது பற்றியும், சில சமயங்களில் உடம்பிலிருந்து தலை, கை, கால் ஆகிய அவயங்களை பிரித்தெடுத்து வைத்து, மறுபடியும் அவற்றை முன்போலவே எப்படி ஒன்று கூறினார் என்பது பற்றியும் இப்பொழுது சொல்கிறேன்.

ஹிந்து என்று கருதினால் அவர் பார்வைக்கு ஒரு முஸ்லீமைப்  போல இருந்தார். முஸ்லீம் என்று நினைத்தால் அவர் ஒரு ஹிந்துவின் லக்ஷணங்களுடன் விளங்கினார். இந்த அபூர்வமான  அவதாரத்தை எந்தப் பேரறிக்னரால் விளக்க முடியும். ?

அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று எவராலும் அணுப்  பிரமாணமும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு வர்க்கத்தினரை யும் அவர் ஒன்று போலவே நடத்தினார்.

ஸ்ரீ ராம நவமி ஒரு ஹிந்துப் பண்டிகை. ஆனால், அவர்தான் அதைக் கொண்டாட வைத்தார். சபா மண்டபத்தில் தொட்டில் கட்டிக் கதாகாலட் சேபமும்  நடக்கும்படி செய்தார்.

மசூதியின் எதிரிலிருந்த சவுக்கதில் தொட்டில் கட்டப்படும். ஸ்ரீ ராம் ஜனன கதா காலத்செபமும்  செய்ய வைப்பார். அன்றிரவே முஸ்லீம்களுக்குச் சந்தக் கூடு ஊர்வலம் நடத்தவும் அனுமதி தந்தார்.

முஸ்லீம்கள் எவ்வளவு பேர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பேர்களையும் சேர்த்து, சந்தனக் கூடு ஊர்வலம் மரியாதையுடன் நடத்தப்பட்டது. இவ்விதமாக அவர் இரண்டு பண்டிகைகளையும் மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட வைத்தார்.

ஸ்ரீ ராம நவமி உற்சவ சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடத்துவதிலும் குதிரைகள், தோடாக்கள் , தலைப் பாகைகள் போன்ற பொருள்களைப் பரிசாக அளிப்பதிலும் மிக மகிழ்ச்சியடைந்தார். 


No comments:

Post a Comment