Thursday, 21 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மகனுடைய காக்காய்வலிப்பு நோயைத் தம் அருட்பார்வையாலேயே குணம் செய்து பெற்றோருடைய வேண்டுதலை எவ்வாறு நிறைவேற்றி வைத்தார் என்பதையும் தந்தையின் பழைய அனுபவங்களை எவ்வாறு ஞாபகப்படுத்தினார் என்பதையும் கூறுகிறேன்; கேளுங்கள்.

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். கதை கேட்பவர்களை சாயியின் கதைகளை ஆர்வத்துடன் கேட்கும்படி வேண்டுகிறேன். கேட்பவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மலரும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பக்தர்களுக்கு க்ஷேம லாபம் அருளிய மாண்பு' என்னும் இருபத்தைந்தாவது  அத்தியாயம் முற்றும்.

                      ஸ்ரீ ஸத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                               சுபம் உண்டாகட்டும்.