Thursday, 14 March 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எத்தனையோ பாபிகள் அவர்களுடைய கர்மாவுக்கேற்றவாறு  மனிதப் பிறவி எடுப்பதற்காக ஆண்  விந்து ரூபத்தில் யோனித் துவார வாயிலில் வந்து நிற்கிறார்கள்.

அதனினும் அதர்மர்கள்  (கடையர்கள் ) நகரும் உயிரினத்திலிருந்து  நகராத தாவரமாக கர்மாவுகேற்றவாறு பிறவிஎடுக்கிறார்கள் .

அடைந்த ஞானத்திற்கும் செய்த கருமானுஷ்டானங்களுக்கும் ஏற்ப ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலை அடைவான் என்று நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இது வேதங்களின் பிரமாணம்.

கருணை வடிவான வேதமாதா சொல்கிறாள், "ஞானத்திற்கு ஏற்றவாறே பிறவி ஏற்படுகிறது". எவ்வளவு இறைஞானம் சேமிக்கப் படுகிறதோ அதற்கேற்றவாறே ஜீவனுக்குப் பிறவி கிடைக்கிறது.

இறைவனுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்து கொள்ள முடியாதவை. அவற்றைப் பற்றிய பூரணமான ஞானத்தை அடையவே முடியாது. ஒரு பகுதியையாவது அறிந்துகொள்ள முடிந்த மனிதன், மகாபாக்கியசாலி.

பரம பாக்கியம் பெற்றவனே மனிதப் பிறவி பெறுகிறான்; அவனினும் புண்ணிய சாலியே உயர் குலத்தில்  பிறக்கின்றான். ஆனால், இறைவனின் அருளே ஒருவரை சாயி பாதங்களுக்குக் கொண்டுவருகிறது. இம்மூன்றும் ஒருசேரக் கிடைப்பது அரிதினும் அரிது.

யோனி ஜன்மமாகப் பிறக்கும் ஜீவராசிகள் எத்தனை  எத்தனையோ. இவையனைத்திலும் மனிதப் பிறவியே சிரேஷ்டமானது. ஏனெனில், மனிதர்களால்தான் 'என்னைப் படைத்தது யார்? நான் எங்கிருந்து வந்தேன்?" என்றெல்லாம் சிந்தனை செய்ய முடியும்

மற்ற ஜீவராசிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. பிறக்கின்றன; வாழ்கின்றன ; ஒருநாள் இறந்து போகின்றன. கடந்த காலத்தைப் பற்றியோ, நிகழ்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ எந்த ஞானமும் அவற்றிற்கு இல்லை

மனிதனைப் படைப்பதில் இறைவன் ஆனந்தம் அடைந்தான் மனிதன் விவேகத்தை உபயோகித்துப் பற்றற்ற நிலையை நாடித் துறவுபூண்டு, தன்னை வழிபடுவான் என்றெண்ணி னான் .

சிருஷ்டியில் வேறு எதற்கும் முக்தியடவதர்கேற்ற சாதனைகள் செய்யக் கூடிய உடலமைப்பு இல்லை. தன்னுடைய உடலை உபயோகப் படுத்தி சாதனைகள் புரிந்து, மரணமே இல்லாத நாராயணனுடன் ஒன்றி விடும் சக்தி மனிதனுக்கு மாத்திரமே உண்டு

மாயாஜால வித்தைக்காரன் சாமர்த்தியசாலிகாயாக இருப்பான்; ரசிக்கத் தெரியாத கூட்டத்திற்கு அவன் விதை காட்டுவதில்லை; தன்னுடைய சூக்குமமான அசைவுகளையும் வேகமான விளைவுகளையும் ரசிக்கும் கூட்டத்தையே நாடுகிறான்

எண்ணிலடங்காத  பறவைகளையும் மிருகங்களையும் மரங்களையும் புழுக்களையும் பூச்சிகளையும்  இதர ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்த பின், பரமேச்வரன் தன்னுடைய லீலைகளைனைத்தும் சாரமில்லாமல்  போய் விட்டனவே என்று ஆச்சரியமடைந்தான்.