ஷீர்டி சாயி சத்சரிதம்
மாதவராவ் சாயிபாதங்களை வணங்கிவிட்டு கிளம்பினார். மிரீகர் உட்காந்து கொண்டிருந்த குதிரைவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.
இருவரும் சிதலீயைச் சென்றடைந்தனர். விசாரித்ததில், வரவேண்டிய ஜில்லா அதிகாரிகள் இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது. ஆகவே, அவர்களிருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர்.
அவர்கள் தங்குவதற்கு ஆஞ்சநேயர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருவருமே பிரயாணம் செய்து களைப்பாக இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர்.
இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. இருவருமே தங்களுடைய ஜமக்காலங்களை விரித்துப் படுக்கை, தலையணை ஆகியவற்றை சீர் செய்துகொண்டு ஒரு விளக்கின் ஒளியில் பேசிக்கொண்டிருந்தனர்.
தினசரிப் பத்திரிக்கை ஒன்று அங்கு இருந்தது; மிரீகர் அதை பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய கவனமெல்லாம் ஒரு விஷேசச் செய்தியைப் படிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.
அந்த விதிவசமானதும் பயங்கரமானதுமான வேளையில், ஒரு பாம்பு அங்கே சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. யாருடைய கண்ணிலும் படாமல் அது எங்கிருந்து, எவ்விதமாக, அங்கு வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.
மிரீகரின் மேல்துண்டின் ஒரு முனை அவருடைய இடுப்பின் பக்கமாகச் சரிந்து இருந்தது. அந்த மிருதுவான ஆசனத்தின் மேல் பயமேதுமின்றி ஓசைப்படாமல் பாம்பு உட்கார்ந்துகொண்டிருந்தது.
பாம்பு ஊர்ந்து முன்னேறியபோது காகிதம் சலசலவென்று சத்தம் செய்தது. ஆனால், யாருமே அந்தச் சத்தத்தைப் பாம்பாக இருக்குமோவென்று சந்தேகிக்கவில்லை.
சூழ்நிலை என்னவோ பயங்கரமாக இருந்தது; ஆயினும் மிரீகரோ செய்தித்தாளை வாசிப்பதில் மூழ்கிப்போய் இருந்தார். அங்கிருந்த ஒரு டபோதரின் (பியோன் - ஏவலர்) மனதில்தான் இந்த பயங்கரமான கற்பனை உதித்தது.
இந்தச் சத்தம் எந்திருந்து வருகிறது! சத்தம் ஏற்படுவது எப்படி? இவ்வாறு கேட்டுக்கொண்டே விளக்கின் பிரகாசத்தை உயர்த்தியபோது அவர் நீளமான ஆசாமியைக் (பாம்பைக்) கண்டார்.
பாம்பைப் பார்த்தவுடன் அவர் விறைத்துப் போனார். 'பாம்பு, பாம்பு!' என்று சன்னமான குரலில் கூவினார். மிரீகர் இதைக் கேட்டு திடுக்கிட்டார்; உடல் முழுவதும் உதற ஆரம்பித்தது.
சாமா முதலில் திகைப்புற்றுச் செய்வதறியாது போனார். பிறகு அவர் கூறினார், "பாபா! என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? இந்த வேண்டாத அபாயத்தை எங்கிருந்து அனுப்பினீர்கள்? இப்பொழுது நீங்களே இதை விளக்க வேண்டும்".
ஆயினும், சூழ்நிலையிலிருந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் அவரவர் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு சந்தடி செய்யாது பாம்பை நோக்கி விரைந்தனர்.
மாதவராவ் சாயிபாதங்களை வணங்கிவிட்டு கிளம்பினார். மிரீகர் உட்காந்து கொண்டிருந்த குதிரைவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.
இருவரும் சிதலீயைச் சென்றடைந்தனர். விசாரித்ததில், வரவேண்டிய ஜில்லா அதிகாரிகள் இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது. ஆகவே, அவர்களிருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர்.
அவர்கள் தங்குவதற்கு ஆஞ்சநேயர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருவருமே பிரயாணம் செய்து களைப்பாக இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர்.
இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. இருவருமே தங்களுடைய ஜமக்காலங்களை விரித்துப் படுக்கை, தலையணை ஆகியவற்றை சீர் செய்துகொண்டு ஒரு விளக்கின் ஒளியில் பேசிக்கொண்டிருந்தனர்.
தினசரிப் பத்திரிக்கை ஒன்று அங்கு இருந்தது; மிரீகர் அதை பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய கவனமெல்லாம் ஒரு விஷேசச் செய்தியைப் படிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.
அந்த விதிவசமானதும் பயங்கரமானதுமான வேளையில், ஒரு பாம்பு அங்கே சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. யாருடைய கண்ணிலும் படாமல் அது எங்கிருந்து, எவ்விதமாக, அங்கு வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.
மிரீகரின் மேல்துண்டின் ஒரு முனை அவருடைய இடுப்பின் பக்கமாகச் சரிந்து இருந்தது. அந்த மிருதுவான ஆசனத்தின் மேல் பயமேதுமின்றி ஓசைப்படாமல் பாம்பு உட்கார்ந்துகொண்டிருந்தது.
பாம்பு ஊர்ந்து முன்னேறியபோது காகிதம் சலசலவென்று சத்தம் செய்தது. ஆனால், யாருமே அந்தச் சத்தத்தைப் பாம்பாக இருக்குமோவென்று சந்தேகிக்கவில்லை.
சூழ்நிலை என்னவோ பயங்கரமாக இருந்தது; ஆயினும் மிரீகரோ செய்தித்தாளை வாசிப்பதில் மூழ்கிப்போய் இருந்தார். அங்கிருந்த ஒரு டபோதரின் (பியோன் - ஏவலர்) மனதில்தான் இந்த பயங்கரமான கற்பனை உதித்தது.
இந்தச் சத்தம் எந்திருந்து வருகிறது! சத்தம் ஏற்படுவது எப்படி? இவ்வாறு கேட்டுக்கொண்டே விளக்கின் பிரகாசத்தை உயர்த்தியபோது அவர் நீளமான ஆசாமியைக் (பாம்பைக்) கண்டார்.
பாம்பைப் பார்த்தவுடன் அவர் விறைத்துப் போனார். 'பாம்பு, பாம்பு!' என்று சன்னமான குரலில் கூவினார். மிரீகர் இதைக் கேட்டு திடுக்கிட்டார்; உடல் முழுவதும் உதற ஆரம்பித்தது.
சாமா முதலில் திகைப்புற்றுச் செய்வதறியாது போனார். பிறகு அவர் கூறினார், "பாபா! என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? இந்த வேண்டாத அபாயத்தை எங்கிருந்து அனுப்பினீர்கள்? இப்பொழுது நீங்களே இதை விளக்க வேண்டும்".
ஆயினும், சூழ்நிலையிலிருந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் அவரவர் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு சந்தடி செய்யாது பாம்பை நோக்கி விரைந்தனர்.
No comments:
Post a Comment