ஷீர்டி சாயி சத்சரிதம்
பிறகு பாபா சொன்னார், "சாமா! நீயும் தயாராகி அவருடன் செல், சிதலிக்கு ஒரு சுற்றுப் போய்விட்டு வா! சுகமான அனுபவம் கிட்டும்."
உடனே சாமா படிகளில் இறங்கி வந்து மிரீகரிடம் சென்று, "நான் உங்களோடு டாங்காவில் (குதிரைவண்டியில்) சிதலீக்கு வரவேண்டும்.-
"நான் வீட்டிற்குப் போய்ச் சடுதியில் தயார் செய்துகொண்டு வந்துவிடுகிறேன். நானும் உங்களுடன் சிதலீக்கு செல்லவேண்டும் என்று பாபா விரும்புகிறார்."
மிரீகர் அவரிடம் கூறினார், "சிதலீக்கு வரைக்கும் அவ்வளவு தூரம் வந்து நீர் என்ன செய்யப் போகிறீர்? உமக்கு அனாவசியமான தொந்தரவு அன்றோ!"
மாதவராவ் திரும்பிச் சென்று பாபாவிடம் நடந்ததைக் கூறினார். பாபா சொன்னார், "சரி, போ! நமக்கென்ன நஷ்டம்?-
"மந்திரம், புண்ணிய தீர்த்தம், பிராமணர், தெய்வம், ஜோசியர், வைத்தியர், குருராயர்- இது விஷயங்களில் எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவே அதிலிருந்து விளையும் பலனும். -
"நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு உபதேசங்களை அளிக்க வேண்டும். அவரவர்களுடைய விதிப்படியே நிச்சயமாக எல்லாம் நடக்கும்!"
திடீரென்று மிரீகருக்கு சந்தேகம் எழுந்தது! பாபாவினுடைய திருவாய் மொழியை மதிக்கவேண்டும். ஆகவே, அவர் மாதவராவுக்கு ஓசை செய்யாது ஒரு சைகை காட்டினார். சிதலீக்கு தம்முடன் வரும்படி அழைத்தார்.
ஆனால், மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்; நான் உங்களுடன் வருகிறேன். பாபாவிடம் மறுபடியும் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறேன்! அவர் 'சரி' என்று சொன்னவுடன் வந்துவிடுகிறேன். இதோ வந்துவிடுகிறேன். -
"நான் வருவதற்காகக் கிளம்பினேன்; நீங்கள் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பாபா சொன்னார், 'சரி, போ! நமக்கென்ன நஷ்டம்? என்று. என்னை அங்கேயே உட்காரவைத்து விட்டார்.-
"இப்பொழுது நான் மறுபடியும் கேட்கிறேன். அவர் 'சரி' என்று சொன்னவுடனே திரும்பி வருகிறேன். பாபா என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறேன். நான் அவருடைய ஆணைக்கு அடிபணியும் தாசன் அல்லேனோ".
சாமா பாபாவிடம் சென்று கேட்டார், "மிரீகர் என்னை வரச் சொல்கிறார். என்னைச் சிதலீக்கு அழைத்துக்கொண்டு போக அனுமதி கேட்கிறார்."
சாயி முகத்தில் புன்னகை தவழக் கூறினார், "சரி, அவர் அழைத்தால் நீ போய் வா! மசூதிமாயி என்பது அவளுடைய பெயர்; தான் அளித்த உறுதியிலிருந்து எப்பொழுதாவது பின்வாங்குவாளா என்ன?-
"தாய்க்கு நிகர் தாயே அன்றோ! குழந்தைகளின் மேல் பாசமுள்ளவள் அல்லளோ! ஆயினும், குழந்தைக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால், அவளால்தான் என்ன செய்யமுடியும்?"
பிறகு பாபா சொன்னார், "சாமா! நீயும் தயாராகி அவருடன் செல், சிதலிக்கு ஒரு சுற்றுப் போய்விட்டு வா! சுகமான அனுபவம் கிட்டும்."
உடனே சாமா படிகளில் இறங்கி வந்து மிரீகரிடம் சென்று, "நான் உங்களோடு டாங்காவில் (குதிரைவண்டியில்) சிதலீக்கு வரவேண்டும்.-
"நான் வீட்டிற்குப் போய்ச் சடுதியில் தயார் செய்துகொண்டு வந்துவிடுகிறேன். நானும் உங்களுடன் சிதலீக்கு செல்லவேண்டும் என்று பாபா விரும்புகிறார்."
மிரீகர் அவரிடம் கூறினார், "சிதலீக்கு வரைக்கும் அவ்வளவு தூரம் வந்து நீர் என்ன செய்யப் போகிறீர்? உமக்கு அனாவசியமான தொந்தரவு அன்றோ!"
மாதவராவ் திரும்பிச் சென்று பாபாவிடம் நடந்ததைக் கூறினார். பாபா சொன்னார், "சரி, போ! நமக்கென்ன நஷ்டம்?-
"மந்திரம், புண்ணிய தீர்த்தம், பிராமணர், தெய்வம், ஜோசியர், வைத்தியர், குருராயர்- இது விஷயங்களில் எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவே அதிலிருந்து விளையும் பலனும். -
"நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு உபதேசங்களை அளிக்க வேண்டும். அவரவர்களுடைய விதிப்படியே நிச்சயமாக எல்லாம் நடக்கும்!"
திடீரென்று மிரீகருக்கு சந்தேகம் எழுந்தது! பாபாவினுடைய திருவாய் மொழியை மதிக்கவேண்டும். ஆகவே, அவர் மாதவராவுக்கு ஓசை செய்யாது ஒரு சைகை காட்டினார். சிதலீக்கு தம்முடன் வரும்படி அழைத்தார்.
ஆனால், மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்; நான் உங்களுடன் வருகிறேன். பாபாவிடம் மறுபடியும் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறேன்! அவர் 'சரி' என்று சொன்னவுடன் வந்துவிடுகிறேன். இதோ வந்துவிடுகிறேன். -
"நான் வருவதற்காகக் கிளம்பினேன்; நீங்கள் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பாபா சொன்னார், 'சரி, போ! நமக்கென்ன நஷ்டம்? என்று. என்னை அங்கேயே உட்காரவைத்து விட்டார்.-
"இப்பொழுது நான் மறுபடியும் கேட்கிறேன். அவர் 'சரி' என்று சொன்னவுடனே திரும்பி வருகிறேன். பாபா என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறேன். நான் அவருடைய ஆணைக்கு அடிபணியும் தாசன் அல்லேனோ".
சாமா பாபாவிடம் சென்று கேட்டார், "மிரீகர் என்னை வரச் சொல்கிறார். என்னைச் சிதலீக்கு அழைத்துக்கொண்டு போக அனுமதி கேட்கிறார்."
சாயி முகத்தில் புன்னகை தவழக் கூறினார், "சரி, அவர் அழைத்தால் நீ போய் வா! மசூதிமாயி என்பது அவளுடைய பெயர்; தான் அளித்த உறுதியிலிருந்து எப்பொழுதாவது பின்வாங்குவாளா என்ன?-
"தாய்க்கு நிகர் தாயே அன்றோ! குழந்தைகளின் மேல் பாசமுள்ளவள் அல்லளோ! ஆயினும், குழந்தைக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால், அவளால்தான் என்ன செய்யமுடியும்?"
No comments:
Post a Comment