valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஈடிணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கத்தி ஏதும் எங்களுக்கு இல்லை.

தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே! அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ!

ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம்! அதை எவ்விதம் வர்ணிப்பேன்! மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டை விரலை கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ!

தேய்பிறையின் பதினைந்தாவது நாளான அமாவாசையின் இருட்டான இரவு கடந்த பிறகு, எல்லாருக்கும் மறுபடியும் சந்திரனைப் பார்க்கவேண்டுமென்கிற ஆவல் எழுவது இயற்கையே.

தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தை பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.

அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.

இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்காலின் கட்டைவிரலைக் கவ்விக் கொண்டிருக்கிறது. கட்டைவிரலின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனை போல நகம் பளபளக்கிறது.

மூன்றாம் பிறைச்சந்திரனை பார்ப்பதற்கு மக்களுக்கு ஆவல் அதிகம். ஆனால், அச் சிறிய ஒளிக்கீற்று சுலபமாக தெரிவதில்லை. விவரம் தெரிந்த மனிதர் அப்பொழுது சொல்லுவார், "இந்த மரத்தின் கவட்டையான இரண்டு கிளைகளுக்கும் நடுவில் பார்" என்று.

அப்பொழுது, இரு கிளைகளுக்கும் நடுவே நமக்கு நேராகவே சந்திரன் தரிசனமாகும். சந்திரனின் கீற்று மிக மெல்லியதாக இருந்தாலும், கிளைகளுக்கு நடுவில் நன்கு தெரியும்.

கட்டியவிரலின் மகிமையே மஹிமை! பாபாவே வேணிமாதவராக ஆகி, புனிதமான கங்கையையும் யமுனையையும் தம்முடைய கட்டைவிரல்களில் இருந்து பெருக்கி தாசகணுவின் விருப்பத்தை திருப்தி செய்தார்.

புண்ணிய தீர்த்தமான பிரயாகைக்கு சென்று ஸ்நானம் செய்யவேண்டுமென்று தாசகணு விக்ஞாபனம் (வேண்டுகோள்) செய்த்தபோது, "என்னுடைய கால் கட்டைவிரலே பிரயாகை என்றறிவாயாக. இங்கேயே ஸ்னானம் செய்."-

என்று பாபா திருவாய் மொழிய, தாசகணு அவர் பாதங்களில் பணிந்தார். பாபாவின் பாதங்களில் இருந்து உடனே கங்கையும் யமுனையும் வெளிப்பட்டன.

அந்த நேரத்தில் தாசகணு உணர்ச்சி வெள்ளத்தில் ஆசுகவியாகப் பாடிய அழகான பாட்டு ஏற்கனவே உங்களால் செவிமடுக்கப்பட்டது. 


No comments:

Post a Comment