valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அவர் பக்கம் திரும்பி அவரைப்பற்றி ஏதோ சொன்னார். அந்த வார்த்தைகள் அவருக்குள்ளே புகுந்து, தேள் போல் கொட்டின. அவர் விசனமுற்றார்.

"ஓ, மக்கள்தாம் எவ்வளவு நேர்மையில்லாமல் இருக்கிறார்கள்! பாதங்களில் விழுந்து வணங்குவர்; தக்ஷிணையும் அர்ப்பணம் செய்வர்; ஆயினும் மனத்துள்ளே எப்பொழுதும் வசைபாடுவர். எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல் புரிகிறார்கள்!"

இதைக் கேட்ட வக்கீல் மௌனம் சாதித்தாலும், அவருடைய உள்மனத்திற்கு அனைத்தும் புரிந்துவிட்டது. பாபாவின் வார்த்தைகளில் நியாயமிருந்தது அவருக்குத் தெரிந்தது. தாத்பரியம் (பாபாவின் நோக்கம்) அவர் மனத்தை எட்டிவிட்டது!

பிறகு அவர் வாடாவிற்கு (சத்திரத்திற்கு) திரும்பியபோது தீக்ஷிதரிடம் சொன்னார். "பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் துளைப்பது போல் இருப்பினும், அவர் கூறியதனைத்தும் சரியே!-

"நான் நுழைந்தபோது பாபா விடுத்த சொல்லம்புகளெல்லாம் உண்மையில், மற்றவர்களைத் தூஷித்துப் பேசுவதிலும் இழிவாகப் பேசுவதிலும் என் மனம் ஈடுபடக்கூடாது என்று எனக்கு அளிக்கப்பட்ட எச்சரிப்பேயாகும்.-

"உடல் நலம் குன்றிய, எங்கள் நீதிபதி, ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும் சுகமடைவதற்காகவும் விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு (ஷிர்டிக்கு) வந்தார்.-

"அந்த சமயத்தில், வக்கீல்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் நீதியபதியைப் பற்றிய பேச்சு எழுந்தது. சம்பந்தமே இல்லாதவர்கள் விவாதத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். -

"வைத்தியம் செய்துகொண்டு சரியான மருந்துண்ணாமல் சாயியின் பின்னால் ஓடுவதால் மட்டும் சரீரத்தின் நோய்கள் 'நிவாரணம் ஆகிவிடுமா என்ன? நீதிபதி பதவியில் இருப்பவர் ஒருவர் இவ்வாறு செய்வது முறியா?" (என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது)-

"இவ்வாறாக நீதிபதியைப் பற்றிய நிந்தையும் புறம் பேசுதலும்  தொடர்ந்தன. ஏளனம் பாபாவையும் விட்டு வைக்கவில்லை. மிகச்சிறிய அளவாக இருக்கலாம்; ஆனால், நானும் அந்த தூஷணைக்கு உடந்தையாக இருந்தேன். அது தகாத செயல் என்பதையே பாபா ஆக்ஷேபனம் (மறுப்பு) செய்து என்னை எச்சரித்தார். -

"பாபா என்னைத் திட்டவில்லை; அனுக்கிரஹமே செய்திருக்கிறார். வீணான வாதங்களையும் தர்க்கத்தையும் இகழ்ச்சியான விமரிசனங்களையும் நிந்தையையும் மற்றவர்களை  பற்றிய தீய எண்ணங்களையும் அறவே ஒழித்துவிடு என்று போதித்து எனக்கு அனுக்கிரஹம் செய்திருக்கிறார். -

"நூறு மைல்களுக்கப்பால் இச்சம்பவம் நடந்ததெனினும், சாயி ஒவ்வொருவர் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதற்கு  இன்னுமொரு நிரூபணம் கிடைத்துவிட்டது. அவர் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி படைத்தவரல்லரோ !-

"இன்னொரு விஷயமும் தெளிவாகிவிட்டது. குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. " 


No comments:

Post a Comment