valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

டாகூர் ஷிர்டிக்கு கிளம்பிய அன்றே நானா ஷிர்டியில் இருந்து கிளம்பிவிட்டார். டாகூர் மனமுடைந்து போனார்.

ஆயினும் அங்கு இன்னொரு நல்ல நண்பரை சந்தித்தார். அவருடைய உதவியால் சாயிதரிசனம் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.

பாதங்களை தரிசனம் செய்த மாத்திரத்தில் பலமாக ஈர்க்கப்பட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உணர்ச்சிவசத்தால் சரீரம் புளங்காகிதம்(மெய்சிலிர்ப்பு) அடைந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

பிறகு சிறிது நேரம் பாபாவின் சந்நிதியில் நின்றார். முக்காலமும் அறிந்த பாபா முகத்தில் புன்னகை தவழ அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனமாக கேளுங்கள்.

"கன்னட அப்பா உமக்கு சொன்னது எருமைக்கடாவின் மேல் ஏறிக்கொண்டு ஒரு கணவாயைக் கடப்பது போலாகும். ஆனால், இந்தப் பாதையில் நடப்பது கடினமாகும். உடலின் அங்கங்கள் தேயுமாறு உழைத்தாக வேண்டும்."

இந்த அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள் காதுகளில் விழுந்தவுடனே டாகூரின் இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. முன்பு ஒரு சத்புருஷர் சொன்ன வார்த்தைகள் நேரிடை அனுபவமாக மலர்வதை உணர்ந்தார்.

இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு சாயிபாதங்களில் சிரம் வைத்து அவர் கூறினார், "மஹராஜ், அனாதையான எனக்கு கிருபை செய்யுங்கள்; என்னை ஆதரியுங்கள்.-

"நீங்களே என் மஹாபுருஷர். நிச்சலதாஸரின் நூல் செய்யும் உபதேசத்தை முழுமையாக இன்றுதான் நான் புரிந்துகொண்டு ஆனந்தமடைந்தேன்.-

"ஓ, வட்காங்வ் எங்கே, ஷீர்டி எங்கே? சத்புருஷரும் மஹாபுருஷருமான இந்த ஜோடி என்னே! எவ்வளவு தெளிவான, சுருக்கமான பாஷை! உபதேசம் செய்யும் திறமைதான் என்னே!-

"ஒருவர் சொன்னார், 'புத்தகத்தைப் படி; பிற்காலத்தில் நீ ஒரு மஹாபுருஷரை சந்திப்பாய். நீ எவ்வழி நடக்கவேண்டுமென்று உபதேசித்து அவர் வழிகாட்டுவார்'. (என்று)-

"தெய்வபலத்தால் அவரை சந்தித்து விட்டேன். அவரும் தாம்தான் அம் மஹான் என்பதை குறிப்பால் அறிவித்துவிட்டார். முதல்வர் சொன்னவாறு நான் அந்நூலைப் படித்தேன். இப்பொழுது இரண்டாமவருடைய உபதேசத்தின்படி நடக்க வேண்டும்."

சாயிநாதர் அவரிடம் சொன்னார், "கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை)! ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்."

வட்காங்வில் நிச்சலதாஸரின் விசாரசாகரம் பக்தரின் நன்மைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறுது காலம் சென்று பின், நூலை பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது ஷிர்டியில் கற்றுக் கொடுக்கப்பட்டது.  


No comments:

Post a Comment