valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இருவருமே சென்று தரிசனம் செய்வோம். அவருக்கு நமஸ்காரம் செய்வோம்; ஓரிரு நாள்கள் அங்கே தங்கிவிட்டு கல்யாண் திரும்புவோம்."

ஆனால், அன்றைய தினமே தானே சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு விஷயமாக டாகூர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆகவே, அவர் சாந்தோர்கருடன் ஷீர்டி செல்லும் யோசனையை கைவிட வேண்டியதாயிற்று.

'பாபா சர்வ சக்திகளும் வாய்ந்தவர்; உம்முடைய தரிசன வேட்கையை நிறைவேற்றுவார். கோர்ட்டு  வழக்கு என்ன பெரிய சமாசாரம்!' என்று நானா சாஹேப் கூறியது வீணாகப் போயிற்று.

அவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. கோர்ட்டு வழக்கிற்கு போகாமல் இருக்க பயப்பட்டார். நெற்றியில் எழுதப்பட்ட விதியின்படி வீணாக அலையாமல் யாரால் இருக்க முடியும்?

பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்கிற தீவிர வேட்கை இருக்கும்போது, எவ்வாறு எல்லா விக்கினங்களும் உடைத்தெறியப்படுகின்றன என்பதை தம்முடைய பழைய அனுபவங்களில் இருந்து நானா விவரித்தார்.

ஆனால், டாகூர் நானாவை நம்புமளவிற்கு தம்மைத் தாமே இசைபட வைக்க முடியவில்லை. ஒருவருடைய இயற்கையான குணத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? அவர் சொன்னார், "முதலில் இந்தக் கோர்ட்டு வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டுவந்து விட்டு, என் மனதின் அரிப்பை ஒழித்துவிடுகிறேன்."

ஆகவே, அவர் தானேவுக்கும் சாந்தோர்கர் ஷிர்டிக்கும் கிளம்பினர். நானா பாபா தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இதனிடையே தானேயில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

வழக்கு விசாரணைக்காக டாகூர் அங்கு இருந்தபோதிலும், வழக்கு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சாந்தோர்கரும் சென்று விட்டார். டாகூர் உள்ளுக்குள் வெட்கமடைந்தார்.

"ஓ, நான் அவரை நம்பியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சாந்தோர்கர் என்னையும் தம்முடன் அழைத்துக்கொண்டு  போய் தரிசனம் செய்துவைத்திருப்பார். ஷிரிடியில் மனம் நிறையும் வரை தரிசனம் செய்திருப்பேன்.-

"இப்பொழுது கோர்ட்டு வேலையும் நடக்கவில்லை; ஞானியை தரிசனம் செய்யும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்" என்று நினைத்துக்கொண்டு  டாகூர் உடனே ஷிர்டிக்கு கிளம்பினார்.

"ஷிர்டிக்கு போய் நானாவை சந்திக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், அவரே என்னை சாயிநாதரின் அரவணைப்பில் சேர்த்துவிட்டால், நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் நினைத்தார்.

"ஷிர்டியில் எனக்கு யாரையுமே தெரியாது; எனக்கு முற்றும் புதிதான இடமாகும். நானாவை அங்கே சந்தித்துவிட்டால் விஷேஷம்; ஆனால், அதற்கு வாய்ப்புக்குறைவாக தெரிகிறது."

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே அவர் ரயில் ஏறி மறுநாள் ஷீர்டி போய்ச் சேர்ந்தார். நானா அங்கு இல்லை. 


No comments:

Post a Comment