valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அடுத்த அத்தியாயத்தில் விநாயக் தாகூரின் காதையும் இன்னும் சில கதைகளும் சொல்லப்படும். செவிமடுப்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

இக் காதைகள் இனிமையானவை; கேட்பதால், மஹாபுருஷர்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற பக்தர்களின் ஆவலும் பூர்த்தியாகும்.

தினமணி (சூரியன்) உதித்தவுடன் இருள் எவ்வாறு விரட்டப்படுகிறதோ, அவ்வாறே இக்கதாமிருதம் மாயையை விரட்டிவிடும்.

சாயியின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல் / விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னை பேசவைப்பார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதனம்' என்னும் இருபதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


No comments:

Post a Comment